Tuesday, June 22, 2010

உண்மை

காற்று மாசு படிந்துவிட்டது
நீர் அமிலமாகிவிட்டது
மண் பாழாகிவிட்டது
இந்தியா வல்லரசாகிவிட்டது
மனிதர்கள் செத்துவிட்டார்கள்

ந.க. விஜயராஜன்

Saturday, June 5, 2010

சொல்ல முடியாதது

துயிலும் ஓர் இரவின் கூட்டில் என்னைப் பொருத்த
அதன் அடுக்குகளில் பயணமானேன்
தெளிவின் ஒளியின்மை என்னை நடத்துகின்றது
மரங்களின் பறவைகள் காய்களாகி இருந்தன
காற்றும் வீசுதலின்றி உறக்கம் பூசுகின்றது
பூக்கள் பற்றி எதையும் அறிய வாய்ப்பில்லை
பாதைகள் இரவு விளக்கினைத் தொலைத்த நேரமது
கற்கள் கண்விழித்துக் கொண்டிருந்தன
எதையும் நோக்கும் நேரமின்மையின் அவசத்தில்
நிலா நில்லாமல் இருந்தது
பகலுறங்கும் புதருக்கடியில் பாம்புகள் உறவாடின
நடத்தல் சாத்தியம்ற்றுப் பின் கனவின் பயணம்
சொல்லவியலாத வார்த்தைகளாலானது அது.

Sunday, May 9, 2010

படைப்புமீது நடத்தப்படும் வன்முறை

இலக்கியப் பிரதிகளை உருவாக்குபவர்கள் கடவுள்கள் அல்ல தவறுகளைச் செய்வதற்கும் அவற்றுக்கான காரணங்களை அடுக்குவதற்கும். தமிழிலக்கியப் பிரதிகளை கவனத்தில் கொள்வோமெனில் இன்னும் மானுடம் மனம் திறந்து பேசக்கூடிய எத்தனையோ செய்திகள அப்படியே இருக்கின்றன.

தலித் பிரச்சினைகளை பிரதிகளாக்கிய காலங்களிலும் அது தீவிர உச்சகட்டத்தை அடைந்த நேரத்திலும் தற்போது அது தேவையற்றதென கருதப் படும் காலத்திலும் இன்னும் காத்திரமாக பேசப்பட வேண்டியவை அப்படியேதான் இருக்கின்றன. கதைகளாக்கப் பட வேண்டிய தலித் வாழ்வுகளும் அதன் எதிர்பாராத தீவிரமும் இன்னும் அப்படியேதான் இருக்கின்றன. அதைவிட இன்னும் முக்கியமானது என்னவென்றால் தலித் எழுத்தாளர்களே அதன் தீவிரம் தற்போது தேவையற்றது என்று கூறும் சூழல்தான்.

இதே அளவுகோலை வைத்துக்கொண்டுதான் பெண் ஆக்கவாளிகளையும் நோக்க வேண்டியுள்ளது. புதிராக இருக்கின்றாள் பெண் என்னும் அங்கலாயிப்பில் புரியவில்லை பெண் என்று சொல்லி அவர்களைப் பூடகமாக வைத்திருந்த சமூக கோட்பாட்டு அரண்களை யெல்லாம் உடைத்து தன்னை பிரகடனப்படுத்தியது பெண்மொழி எழுத்து.

அது அப்படி தன்னை உடைத்துக் கொண்டு வெளிவந்தபோது எல்லாமே தகர்ந்துபோயின. எந்தெந்த உறுப்புகளை மையமாக வைத்து ஆண் ஆக்கங்கள் பெண்ணைப் பார்த்தனவோ அவை திறக்கப்பட்ட பாசறையிலிருந்து எடுக்கப்பட்ட ஆயுதங்களாக மாறின. அவை காற்றின் எல்லா திசைகளிலும் கல்ந்து பெரும் வீச்சுடன் நெருங்கின. அதிர்ந்த ஆண் ஆக்கங்கள் அவற்றை எதிர்த்தன. கூக்குரல்கள் எழுப்பின. ஆனால் அவற்றையெல்லாம் மீறி பெண்மொழி காலமாக மாறிவிட்டது. அதனை காலத்திலிருந்து யாரும் பிரிக்கமுடியாது.

ஆனால் லீனா மணிமேகலை என்னும் கவிஞரின் கவிதைகள் ஆபாசமாக இருக்கின்றன என்று இந்துத்துவ இயக்கங்கள் காவல் துறையிடம் புகார் கொடுத்திருக்கின்றது என்று ஒரு செய்தி அடிபடுகிறது. அது உண்மையாக இருக்கும் என்றும் சொல்லப்படுகிறது. அப்படி உண்மையாக இருக்கும் பாட்சத்தில் அதில் என்னவிதமான நியாயம் இருக்கின்றது என்று தெரியவில்லை. அதுவும் அது குறித்து கேள்விகள் கேட்கும் தாத்பரியங்கள் எதுவும் இந்துத்துவ அமைப்புகளுக்கு இல்லை.

இந்துக் கோவில்களில் உள்ள ஆபாசமான சிலைகள். இந்துக்கடவுளர்களின் ஆபாச புராணங்கள் இதெல்லாம் எப்படி நியாயப்படுத்தப்படுபவனாக இருக்கக் கூடும்.
எழுத்து என்பது அவருடைய உரிமை. அவரின் துன்பங்களை அவஸ்தைகளை எழுச்சியை எழுதுவதற்கு அவருக்கு உரிமை உண்டு. அப்படி இருக்கும்போது அது ஆபாசம் ஆபாசமில்லை நியாயத்தீர்ப்பு வழங்க யாருக்கும் உரிமை இல்லை.
எழுத்துதான் சமூகத்தை மாற்றி இருக்கின்றது. அதனால்தான் இந்துத்துவ இயக்கங்கள் இதை தூக்கிப் பிடிக்கின்றன. தீட்டு என ஒதுக்கி வைத்தவைகள் எல்லாம் பாடுபொருளாக மாறிவிட்டன. தடைகளைத் தகர்க்கின்றன. சமூகத்தினை கட்டுடைக்கின்றன. அதனால் தாங்கல் அமைத்துவைத்துள்ள சாதிய அடுக்குகள் சரிந்துவிடுகின்றன அதனால் தங்களின் வியாபாரம் நடக்கவில்லை என்பதுதான் அவர்களைன் இந்த எரிச்சலுக்குக் காரணம். கவலைப் படாதீர்கள் மதவாதிகளே நீங்கள் நினைக்கின்ற எதுவும் இங்கு நடக்காது. தீட்டு என்று நீங்கள் ஒதுக்கிவைத்தவர்கள் எல்லாம் எழுத்தை ஆயுதமாகத் தூக்கிவருகிறார்கள். உருட்டப்பட்ட உத்ராட்சைகளில் உலகை ஆளாலாம் என்ற கனவினை விட்டுவிடுங்கள் தீட்டுத்துணியென நீங்கள் சொன்ன அதுதான் புத்தகங்களாகவும் விடுதலைக்கான கருவியாகவும் பயன்பட வருகின்றன. ஒட்டுமொத்த விடுதலைக்காக பீ வாரிய கரண்டியும் கூடையும் செருப்புத்தைத்த ஊசிகளும் பேனாக்களாகிப் பேசுகின்றன. சேரிகள் பாசறைகளாகின்றன. பாடங்கள் ஊட்டப்படும்
Posted by பறை at 5:37 AM 3 comments Links to this post
Wednesday, March 10, 2010

அப்படி இன்னும் தெரியவில்லை யாருக்கும்
கடந்தவைகளின்மீதும்
நிகழ்பவைகளின்மீதும்
வினையாற்றும் விவரம்
கருமையின் இருப்பாயிருக்கும்
காலமேகம் பொழியும் மழையின் துயரம்
வேர்களை வேட்டையாடும் பொழுது எதுவாயினும்
அதில் நிகழும் மாற்றத்தின் குடியமர்ந்து
வாழும் குயிலின் பாடலைப் போல
அமைந்திருக்கும் வாழ்வு
Posted by பறை at 5:59 PM 0 comments Links to this post
Tuesday, March 2, 2010
தலித் பெண்ணெழுத்து: அடைய வேண்டிய பொன் இடம்


(விளாத்திகுளத்திலிருந்து வெளிவரும் கரிசல்கதிர் என்னும் இதழில் வெளியானது)

தமிழ் இலக்கிய வரைவினில் இன்றைக்கு பெண் எழுத்து முக்கியமான இடத்தை அடைந்திருக்கின்றது.சங்க இலக்கியத்திலேயே தமிழில் பெண் ஆக்கவாளிகள் மிகவும் சிறப்பாகவும் தங்களைன் எண்ணங்களை எந்தவிதமான தயக்கமுமின்றி கூறும் தன்மையுடன் இருந்திருக்கின்றனர். வெண்ணிக்குயத்தியார் என்னும் பெண்பால் புலவர் தன் காதலனைக்குறித்து பாடுவதும் அவனைத்தேடி செல்லுதலும் தமிழரின் வாழ்வுக்கு எடுத்துக்காட்டாய் அமைகின்றன. பௌத்த சமண சமயங்களின் பரவலால் வேறுபாடுகளற்றதாய் தமிழ்ச்சமூகம் இருந்தது. அதனால்தான் தற்கொல்லியை முற்கொன்ற குண்டலகேசி கதைகள் எழுதப்பட்டன.சமய இலக்கியக் காலங்களில் ஆண்டாளின் கவிதைகள் அவருடைய கடவுள்சார்ந்த கருத்துக்களை விட்டுவிட்டு பார்க்கின்றபோது அற்புதமான கவிதைகள். கவிதைக்கான தொழில்நுட்பத்துடன் இயங்கக் கூடியன அவை.

அதற்குப்பிறகு தமிழிலக்கிய வெளியில் பெண் எழுத்துக்கான தேக்கம் மிக நீண்டகாலமாகவே இருந்தது என்பது மறுக்கவொண்ணாதது.எங்காவது ஒருவர் எப்போதாவது ஒருவர் எழுதியிருப்பார். ஆனால் அவருடைய ஆக்கங்கள் அத்தனையளவு பேசப்பட்டிருக்குமா என்றால் இல்லை. காதலா கடமையா என்னும் நாவலை எழுதிய சித்தி ஜுனைதா பேகம் இபோதுதான் வெளியே தெரிய ஆரம்பித்திருக்கின்றார். இந்தக் காலக்கட்டத்தில் கவிதையில் பெண் நிலை என்பது மிகவும் மோசமாகவே இருந்தது. பத்தொன்பதாம் நூற்றாண்டில் தமிழ்க்கவிதை இரு நதிகளாய் கிளைவிட்டு நகர்ந்தபோதும் எந்த நதியிலும் பெண்ணெழுத்துக்கான தடம் பதியப்படவில்லை. வானம்பாடிகளானாலும் நவீன கவிதைகளை உருவாக்கியவர்களானாலும் பெண்களை முன்னிலைப்படுத்தவில்லை. அவரவர் ஆக்கங்களில் வேண்டுமானாலும் பெண்கள் குறித்த சித்திரங்களை எழுதினார்களே ஒழிய பெண் எழுதும் தளம் என்பது உருவாகவில்லை.

அதற்குப் பல காரணங்களை நம்மால் பட்டியல் போடமுடியும்.பெண்கல்வி என்பது மிகவும்குறைவாக இருந்தது. விடுதலை அடைந்த ஆண்டில் ஆயிரம் பெண்களில் ஆறு பெண்கள்தான் படித்திருந்தார்கள் என்றெல்லாம் புறக்காரணிகளை அடுக்கலாம். ஆனால் அவற்றையெல்லாம்விட மிக முக்கியமானது எழுத்து ஆதிக்கக் காரர்களிடமிருந்தது. அது அவர்கள் வீட்டுப்பரணில் பதுங்கியிருக்கும் பூனையைப்போலத் தான் பதுங்கியிருந்தது. இந்திய ஆதிக்கம் என்பது இந்து ஆதிக்கம் தானே. தமிழர்களும் இடைக்காலத்தில் பௌத்த வீழ்ச்சிக்குப் பிறகு காவிமயமாதல் நிகழ்ந்து தமிழகமும் தன்னிலை மறந்த சுடுகாடாக இந்துத்துவ சிந்தனை வெளியில் இருந்தது

அந்தக்காலக்கட்டங்களி தோன்றிய எழுத்து வகைகள் ஆதிக்கவெறி பிடித்தவர்களின் வாழ்வையும் அவர்களின் மொழியும்தான் பதிவாகின.இந்த நிலையில் பொதுவரங்கில் எழுதவந்த பெண்கள் தமிழ்ச்சூழலில் கதைகள் எழுதினார்கள். அதில் அவர்கள் பெண்களை விடுதலைக்கானவர்களாகக் கருதாமல் அவர்களை மற்ற ஆண் எழுத்தாளர்கள் எழுதுவதைபோலவே எழுதினார்கள் என்பதும் கண்கூடு.


தொன்னூறுகளில் தலித் எழுத்து தமிழில் தீவிரமடைகிறபோதுதான் பெண்ணெழுத்தும் தீவிரமடைகின்றது. எப்படி அரசியல்தளத்திலு சமூகத்தளத்திலும் தலித் விடுதலையும் பெண்விடுதலையும் ஒருசேரப் பார்க்கப்படுகின்றதோ அதைப் போலத்தான் இலக்கியத்திலும் பார்க்கப்பட வேண்டும். ஆதிக்கப் புலத்திருந்து கல்வியும் வாசிப்பும் பெண்களுக்கும் தலித்துகளுக்கும் கிடைத்தபோதுதான் அவர்கள் அவர்களுக்கான எழுத்தினை உருவாக்கினார்கள். அந்த எழுத்தின் காத்திரமும் அதன் தேவையும் இன்று சமூகத்தளத்தின் போதாமைகளை எடுத்துப் பேசுகின்றன. தலித் எழுத்தாளர்கள் தொட்ட பிரச்சினைகள் வாழ்வியல் விழுமியங்களாக இருந்து பின்னால் அவை அரசியல் முழக்கங்களாக மாறி அரசின் திட்டங்களாக அவை உருவாகின்றன. இத்தகைய குறைந்தபட்ச சமூக மாற்றத்தையாவது இவ்வகையான எழுத்துக்கள் கொணர்ந்திருக்கின்றன.

இச்சூழலில் பெண்ணெழுத்தின் இன்றைய நிலை யாது என்னும் கேள்வி எழுகிறது. மனுவின் கூற்றுப்படி பெண் பார்ப்பனக் குலத்தில் பிறந்திருந்தாலும் சூத்திரருக்குரிய ஒடுக்குதலுக்கு உள்ளாகிறவளாக இருக்கிறாள். அதனால் பொதுப் பெண்ணியம் எனபதும் அதைச் சார்ந்து இயங்கக் கூடிய இலக்கியத்தளம் மட்டுமே போதும் என்பதையும் தாண்டி தலித் பெண்ணியம் பேசப்படுகிறது. பொதுவான பெண்ணிலக்கியம் தலித் பெண்ணின் விடுதலையைச் சாத்தியப்படுத்துகிறதா? பல பொதுப் பெண்ணிய எழுத்தாளர்கள் மேல்தட்டு மனோபாவதோடு மட்டுமே இயங்குகிறார்கள் என்பதும் கண்கூடு.

தலித் பெண்ணெழுத்து என்பது பொதுப்பெண்ணியத்திலிருந்து எந்தப் புள்ளியில் வேறுபடுகிறது எப்படி அதன் இயக்கம் இருக்கும் என்பது குறித்த பிரக்ஞை ஏதுமற்று சாதி ஒடுக்குமுறைகளையும் அதனால் ஏற்பட்டு துயரவெளிகளையும் ஆக்கங்களாக மாற்றிவிடுவது மட்டுமே ஆகாது. மாறாக பெண் அடக்குமுறைக்கு உள்ளான காலத்தின் சூழ்ச்சிக்குறித்தும் அதன் கூரிய அம்பாகவும் ஆயுதமாகவும் இருக்கின்ற மதம் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தாமல் தலித் பெண்ணெழுத்தும் சாத்தியமற்றுதான் போய்விடும்.

தலித் எழுத்துக்கான தேவை நிறைவடைந்துவிட்டதாகவும் அது தேங்கிவிட்டதாகவும் கூறுபவர்கள் தலித்திய சிந்தனையின் ஆழத்திலிருந்து புறப்படாதவர்கள். அதேபோல்தான் தலித் பெண்ணெழுத்தும். பெண்ணிய எல்லாவாத அடிமைத்தனத்திற்கும் காரணமாய் இருப்பது ஒன்றுதான் அதுதான் இந்து மதம். தீட்டு என்னும் சொல்லைப் பயன்படுத்தி தன் குடும்பத்தில் உள்ள பெண்களையே வீட்டிற்கு வெளியே வைத்ததுதான் இந்து ஆதிக்க மரபு.இதையே சமூகத்திற்குப் பொருத்தினால் சேரி. உழைக்கின்ற பெண்களை அவர்களின் உழைப்பைச் சுரண்டி அவர்களின் உடல் உபாதைகளைப் பற்றிய அக்கறை ஏதுமின்றி புறந்தள்ளிஅவர்களின் வாழ்வாதாரத்திற்குத் தேவையான எல்லாவற்றையும் மறுத்து ஆணை குடும்பத்தை சார்ந்து வாழ்வதுதான் அவர்களுக்கு விதிக்கப்பட்டது என்று சொல்லி பெண் என்னும் உயிரை ஒரு பொருளாகக் கூட மதிக்காததுதான் இந்துத்துவம்.

தலித்துகளும் பெண்களும் இந்துத்துவ ஆதிக்கத்தினால் சமூகத்தின் விளிம்பு நிலைக்குத் துரத்தப்பட்டவர்கள் என்றாகின்றனர். சமூகம் இந்த இந்துத்தத்துவத்தினால் ஜனநாயகமற்றதாய் மாறிவிட்டது. இதைக் கருத்துருவாகக்கொண்டு இந்துமத வெளியேற்றமே சமூக விடுதலை என்றாய்ந்து அதை நிலைநிறுத்த நாக்பூரில் அய்ந்து லட்சம் மக்களோடு புத்த மதத்திற்கு மாறினார் புரட்சியாளர் அம்பேத்கர். இந்துவாகப் பிறந்தேன் அது ஒரு விபத்து; ஆனால் கண்டிப்பாக இந்துவாகச் சாக மாட்டேன் என்று சொல்லி ஏறக்குறைய முப்பது ஆண்டுகால தீவிர தேடலுக்குப் பிறகு பவுத்தம்தான் மானுட விடுதலைக்கு சரியான வழி என்று பிரகடனம் செய்து அதை நிறைவேற்றினார் புரட்சியாளர்.

இந்தப் புள்ளியிலிருந்துதான் பெண்ணெழுத்தைப் பார்க்க வேண்டியுள்ளது. இந்துத்துவம்தான் பெண்ணை மனிதப் பிறப்பிலிருந்து கழித்து வைத்தது. பெண்களை இனப்பெருக்கம் செய்வதற்கும் வயல்வெளிகளில் மாடுகளைப் பயன்படுத்துவதைப்போல வீட்டில் வேலைகளை குறிப்பாக ஆணுக்கான வேலைகளைச் செய்வதற்கும் நிர்பந்தப்படுத்தியது. அவர்களின் உடலைவைத்தே அவர்களைப் புறந்தள்ளியோ அல்லது வன்புணர்வு செய்தோ அல்லது அதைக் கொண்டாடி தன்னின்பத்திற்குப் பயன்படுத்திக்கொண்டது. அந்த உடலைப் பயன்படுத்திதான் இன்றைய நவீன பெண்கவிஞர்கள் ஆண் சமூகத்திற்கு எதிராக எழுத ஆரம்பித்தார்கள்

மயிர்கள் சிரைக்கப்படாத என் நிர்வாணம்
அழிக்கப்படாத காடுகளைப்போல்
கம்பீரம் வீசுகிறது

என்று சுகிர்தராணியால் எழுதமுடிகிறது என்றால் அதை பாலியல் கவிதை என்று சொல்லிவிட முடியாது. மறுக்கப்பட்ட யோனிகளையும் முலைகளையும் பதாகைகளாக உயர்த்துவது என்னும் கருத்தியலின் மூலம் அது. ஆனால் இத்தகைய கவிதைகளை ஆண் அறிஞர்கள் பாலியல் கவிதைகள் என்று வகைமைப்படுத்துகிறார்கள். இத்தகைய கவிதைகள் பாலியல் கவிதைகள் அல்ல அவற்றை பெண்மொழிக் கவிதைகள் என்றும் கூட நாம் அழைக்கலாம். ஆணியத்திற்கு எதிராக இந்தக் கவிதைகள் மாறியிருக்கின்றன. அதுவும் நல்லதுதான். ஆனால் வெறுமனே ஆணியம் அல்லது லிங்கமைய வாதம் என்பது பொதுப் பெண்ணியம். அதில் தலித் பெண்ணியத்திற்கான நுண்ணரசியலைக் கட்டக்கூடிய இடம் இல்லாமலே இருக்கின்றது. சமூக அரசியலில் சமத்தன்மை வருவதற்குப் புரட்சியாளர் அம்பேதகர் சொன்ன இந்துக்களிடமிருந்து விடுதலை என்னும் தத்துவத்தைத்தான் நாம் இங்கே பொருத்த வேண்டும். ஆணியம் என்பது இந்துத்துவத்தின் ஓர் ஏற்பாடு.

ஆக, பெண்ணெழுத்து எதை மோதி உடைக்க வேண்டும் என்றால் இந்துத்துவத்தை. அதன் கூறாக இருக்கின்ற இந்துமதத்தை. அதன் முகமூடியாக இருக்கின்ற இந்துத்துவ பயங்கரவாத அரசியலை. அதன் இயங்குதளமாக இருக்கின்ற இந்துப் பண்பாட்டு முதல்வாதத்தை. என்ன நடக்கிறது உண்மையிலே என்று பார்த்தால் பொதுவான பெண் ஆக்கவாளிகள் யாரும் தங்களுடைய இந்து அடையாளத்தை துறந்தாரில்லை. அகில இந்திய அளவில் அரசியலில் இந்து அரசியலுக்கு எதிராகப் பார்க்கப்படுகின்ற பிருந்தா காரத் கூட இந்து அடையாளமாகிய பெரிய பொட்டோடுதான் காட்சி தருகிறார்கள். இந்துத்துவம் சொன்ன பெண் அடையாளங்கள் அனைத்தும் பெண் ஆக்கவாளிகளிடத்தில் இருக்கின்றன. புற அடையாளங்களான உடைகளில் மாற்றங்கள் இருக்கின்றன. இது இப்போது எந்தவிதமான சமூக அக்கறையுமின்றி குடும்ப அடிமைகளாக இருக்கின்ற பெண்கள்கூட அழகியலை முன்னிருத்தி இத்தகைய புற அடையாள மாற்றங்களோடுதான் இருக்கின்றார்கள்.

சமூக முன்னனியினராக இருக்கக்கூடிய பெண் ஆக்கவாளிகள் எந்நிலையிலிருந்து தங்கள் முன்னெடுப்பைத் தொடுப்பது என்பதுதான் நம் வினா. தலித் அரசியல் நிலையில்தான் அதனை முன்னெடுக்கவேண்டும். அரசியலில் எத்தனையோ உயர்பதவிகளில் தலித்துகள் இருக்கின்றார்கள். பெரும்பணக்காரர்களாகவும் இருக்கின்றனர் ஆனால் அவர்களின் மீதான சாதி இழிவு போய்விட்டதா என்றால் இல்லை எல்லாரும் ’அவங்கதான்’ என்றுதான் இன்றளவும் பேசப்படுகிறார்கள். பெண்களும் அப்படித்தான் பெரும்பதவிகளும், செல்வங்களும் இருந்தாலும் பெண் என்னும் எண்ணம்தான் எப்போதும் இருக்கின்றது. பவுத்தர்களாக மாறியபிறகு தலித்துகளுக்கான சமதர்ம வாழ்வு சாத்தியப்படுகிறது, பிற மதங்கள் எல்லாம் இங்கு இந்து சாயலில்தான் இருக்கின்றன.

பெண் அடையாளத்தினை அறிவுத்தளத்திலும் சமூகத்தளத்திலும் நாம் மாற்ற வேண்டியுள்ளது. பாமா,சிவகாமி போன்ற தலைமுறையினர் தலித் இலக்கியத்தின் இயங்குதளத்தினை வெகு ஆழமாக்கி வைத்திருக்கின்றனர். சுகிர்தராணி போன்றோர்கள் பெண்மொழிக்கவிதைகளை அதன் வீரியத்தோடு ஆக்கி இருக்கின்றனர். பெண்ணெழுத்தை அடுத்த நிலைக்கு கொண்டு செல்ல இந்துத்துவத்திற்கு எதிராக ஆக்கங்களை உருவாக்கும் ஆளுமைகளாக இவர்கள் மாறவேண்டும். பௌத்தம் பேசும் ஆக்கங்களை இவர்கள் தர வேண்டும். பௌத்தமீட்சி ஒன்றுதான் தலித்துகளையும் பெண்களையும் விடுவிக்கும். அதற்கான ஏற்பாடுகளோடு பெண்ணிலக்கியம் பயணப்படவேண்டும். அது இந்தத் தலைமுறை ஆக்கவாளிகளில் கு.உமாதேவியின் கவிதைகளில் வந்துகொண்டிருக்கின்றது என்று நான் அவதானிக்கிறேன்.
Posted by பறை at 6:31 PM 1 comments Links to this post
Friday, February 19, 2010
தருணம்
தருணத்தின் அமைவு கிட்டாத எதுவும்
இன்மையோடு தொடர்கிறது
வந்ததிலிருந்தே வருகை குறித்த பெருமிதம்
மிகைந்து அழிகிறது துளித்துளியாய்
போகையில் அழிந்த எந்த துவாரமும்
காற்றையோ
நீரையோ
கொண்டு செல்வதில்லை
வருகையில் மிஞ்சும் போவதைக்
குறித்த எந்த பிரக்ஞையுமின்றி
இருக்கின்றோ மெல்லாம் நாம்
Posted by பறை at 9:17 AM 1 comments Links to this post
Thursday, February 4, 2010
ஏதோ

தீர்க்கமானக் கோடுகளால் வரையக்கூடியன
அல்ல அவை
பகடிகளற்ற சொற்கள் உலவும் வனம்
பிசிறுகள் சற்றேனும் இல்லா மேகம்
ஊறிய தேனில் மிதக்கும் மதுரம்
யாருமற்ற வெளியொன்றின் மௌனம்
எல்லாவற்றிலும்
இருக்கும் உன் எஞ்சிய அழகிடை
என்ன இருக்கின்றடு இன்னும்
இலக்கியப் பிரதிகளை உருவாக்குபவர்கள் கடவுள்கள் அல்ல தவறுகளைச் செய்வதற்கும் அவற்றுக்கான காரணங்களை அடுக்குவதற்கும். தமிழிலக்கியப் பிரதிகளை கவனத்தில் கொள்வோமெனில் இன்னும் மானுடம் மனம் திறந்து பேசக்கூடிய எத்தனையோ செய்திகள அப்படியே இருக்கின்றன.

தலித் பிரச்சினைகளை பிரதிகளாக்கிய காலங்களிலும் அது தீவிர உச்சகட்டத்தை அடைந்த நேரத்திலும் தற்போது அது தேவையற்றதென கருதப் படும் காலத்திலும் இன்னும் காத்திரமாக பேசப்பட வேண்டியவை அப்படியேதான் இருக்கின்றன. கதைகளாக்கப் பட வேண்டிய தலித் வாழ்வுகளும் அதன் எதிர்பாராத தீவிரமும் இன்னும் அப்படியேதான் இருக்கின்றன. அதைவிட இன்னும் முக்கியமானது என்னவென்றால் தலித் எழுத்தாளர்களே அதன் தீவிரம் தற்போது தேவையற்றது என்று கூறும் சூழல்தான்.

இதே அளவுகோலை வைத்துக்கொண்டுதான் பெண் ஆக்கவாளிகளையும் நோக்க வேண்டியுள்ளது. புதிராக இருக்கின்றாள் பெண் என்னும் அங்கலாயிப்பில் புரியவில்லை பெண் என்று சொல்லி அவர்களைப் பூடகமாக வைத்திருந்த சமூக கோட்பாட்டு அரண்களை யெல்லாம் உடைத்து தன்னை பிரகடனப்படுத்தியது பெண்மொழி எழுத்து.

அது அப்படி தன்னை உடைத்துக் கொண்டு வெளிவந்தபோது எல்லாமே தகர்ந்துபோயின. எந்தெந்த உறுப்புகளை மையமாக வைத்து ஆண் ஆக்கங்கள் பெண்ணைப் பார்த்தனவோ அவை திறக்கப்பட்ட பாசறையிலிருந்து எடுக்கப்பட்ட ஆயுதங்களாக மாறின. அவை காற்றின் எல்லா திசைகளிலும் கல்ந்து பெரும் வீச்சுடன் நெருங்கின. அதிர்ந்த ஆண் ஆக்கங்கள் அவற்றை எதிர்த்தன. கூக்குரல்கள் எழுப்பின. ஆனால் அவற்றையெல்லாம் மீறி பெண்மொழி காலமாக மாறிவிட்டது. அதனை காலத்திலிருந்து யாரும் பிரிக்கமுடியாது.

ஆனால் லீனா மணிமேகலை என்னும் கவிஞரின் கவிதைகள் ஆபாசமாக இருக்கின்றன என்று இந்துத்துவ இயக்கங்கள் காவல் துறையிடம் புகார் கொடுத்திருக்கின்றது என்று ஒரு செய்தி அடிபடுகிறது. அது உண்மையாக இருக்கும் என்றும் சொல்லப்படுகிறது. அப்படி உண்மையாக இருக்கும் பாட்சத்தில் அதில் என்னவிதமான நியாயம் இருக்கின்றது என்று தெரியவில்லை. அதுவும் அது குறித்து கேள்விகள் கேட்கும் தாத்பரியங்கள் எதுவும் இந்துத்துவ அமைப்புகளுக்கு இல்லை.

இந்துக் கோவில்களில் உள்ள ஆபாசமான சிலைகள். இந்துக்கடவுளர்களின் ஆபாச புராணங்கள் இதெல்லாம் எப்படி நியாயப்படுத்தப்படுபவனாக இருக்கக் கூடும்.
எழுத்து என்பது அவருடைய உரிமை. அவரின் துன்பங்களை அவஸ்தைகளை எழுச்சியை எழுதுவதற்கு அவருக்கு உரிமை உண்டு. அப்படி இருக்கும்போது அது ஆபாசம் ஆபாசமில்லை நியாயத்தீர்ப்பு வழங்க யாருக்கும் உரிமை இல்லை.
எழுத்துதான் சமூகத்தை மாற்றி இருக்கின்றது. அதனால்தான் இந்துத்துவ இயக்கங்கள் இதை தூக்கிப் பிடிக்கின்றன. தீட்டு என ஒதுக்கி வைத்தவைகள் எல்லாம் பாடுபொருளாக மாறிவிட்டன. தடைகளைத் தகர்க்கின்றன. சமூகத்தினை கட்டுடைக்கின்றன. அதனால் தாங்கல் அமைத்துவைத்துள்ள சாதிய அடுக்குகள் சரிந்துவிடுகின்றன அதனால் தங்களின் வியாபாரம் நடக்கவில்லை என்பதுதான் அவர்களைன் இந்த எரிச்சலுக்குக் காரணம். கவலைப் படாதீர்கள் மதவாதிகளே நீங்கள் நினைக்கின்ற எதுவும் இங்கு நடக்காது. தீட்டு என்று நீங்கள் ஒதுக்கிவைத்தவர்கள் எல்லாம் எழுத்தை ஆயுதமாகத் தூக்கிவருகிறார்கள். உருட்டப்பட்ட உத்ராட்சைகளில் உலகை ஆளாலாம் என்ற கனவினை விட்டுவிடுங்கள் தீட்டுத்துணியென நீங்கள் சொன்ன அதுதான் புத்தகங்களாகவும் விடுதலைக்கான கருவியாகவும் பயன்பட வருகின்றன. ஒட்டுமொத்த விடுதலைக்காக பீ வாரிய கரண்டியும் கூடையும் செருப்புத்தைத்த ஊசிகளும் பேனாக்களாகிப் பேசுகின்றன. சேரிகள் பாசறைகளாகின்றன. பாடங்கள் ஊட்டப்படும்
Posted by பறை at 5:37 AM 3 comments Links to this post
Wednesday, March 10, 2010

அப்படி இன்னும் தெரியவில்லை யாருக்கும்
கடந்தவைகளின்மீதும்
நிகழ்பவைகளின்மீதும்
வினையாற்றும் விவரம்
கருமையின் இருப்பாயிருக்கும்
காலமேகம் பொழியும் மழையின் துயரம்
வேர்களை வேட்டையாடும் பொழுது எதுவாயினும்
அதில் நிகழும் மாற்றத்தின் குடியமர்ந்து
வாழும் குயிலின் பாடலைப் போல
அமைந்திருக்கும் வாழ்வு
Posted by பறை at 5:59 PM 0 comments Links to this post
Tuesday, March 2, 2010
தலித் பெண்ணெழுத்து: அடைய வேண்டிய பொன் இடம்


(விளாத்திகுளத்திலிருந்து வெளிவரும் கரிசல்கதிர் என்னும் இதழில் வெளியானது)

தமிழ் இலக்கிய வரைவினில் இன்றைக்கு பெண் எழுத்து முக்கியமான இடத்தை அடைந்திருக்கின்றது.சங்க இலக்கியத்திலேயே தமிழில் பெண் ஆக்கவாளிகள் மிகவும் சிறப்பாகவும் தங்களைன் எண்ணங்களை எந்தவிதமான தயக்கமுமின்றி கூறும் தன்மையுடன் இருந்திருக்கின்றனர். வெண்ணிக்குயத்தியார் என்னும் பெண்பால் புலவர் தன் காதலனைக்குறித்து பாடுவதும் அவனைத்தேடி செல்லுதலும் தமிழரின் வாழ்வுக்கு எடுத்துக்காட்டாய் அமைகின்றன. பௌத்த சமண சமயங்களின் பரவலால் வேறுபாடுகளற்றதாய் தமிழ்ச்சமூகம் இருந்தது. அதனால்தான் தற்கொல்லியை முற்கொன்ற குண்டலகேசி கதைகள் எழுதப்பட்டன.சமய இலக்கியக் காலங்களில் ஆண்டாளின் கவிதைகள் அவருடைய கடவுள்சார்ந்த கருத்துக்களை விட்டுவிட்டு பார்க்கின்றபோது அற்புதமான கவிதைகள். கவிதைக்கான தொழில்நுட்பத்துடன் இயங்கக் கூடியன அவை.

அதற்குப்பிறகு தமிழிலக்கிய வெளியில் பெண் எழுத்துக்கான தேக்கம் மிக நீண்டகாலமாகவே இருந்தது என்பது மறுக்கவொண்ணாதது.எங்காவது ஒருவர் எப்போதாவது ஒருவர் எழுதியிருப்பார். ஆனால் அவருடைய ஆக்கங்கள் அத்தனையளவு பேசப்பட்டிருக்குமா என்றால் இல்லை. காதலா கடமையா என்னும் நாவலை எழுதிய சித்தி ஜுனைதா பேகம் இபோதுதான் வெளியே தெரிய ஆரம்பித்திருக்கின்றார். இந்தக் காலக்கட்டத்தில் கவிதையில் பெண் நிலை என்பது மிகவும் மோசமாகவே இருந்தது. பத்தொன்பதாம் நூற்றாண்டில் தமிழ்க்கவிதை இரு நதிகளாய் கிளைவிட்டு நகர்ந்தபோதும் எந்த நதியிலும் பெண்ணெழுத்துக்கான தடம் பதியப்படவில்லை. வானம்பாடிகளானாலும் நவீன கவிதைகளை உருவாக்கியவர்களானாலும் பெண்களை முன்னிலைப்படுத்தவில்லை. அவரவர் ஆக்கங்களில் வேண்டுமானாலும் பெண்கள் குறித்த சித்திரங்களை எழுதினார்களே ஒழிய பெண் எழுதும் தளம் என்பது உருவாகவில்லை.

அதற்குப் பல காரணங்களை நம்மால் பட்டியல் போடமுடியும்.பெண்கல்வி என்பது மிகவும்குறைவாக இருந்தது. விடுதலை அடைந்த ஆண்டில் ஆயிரம் பெண்களில் ஆறு பெண்கள்தான் படித்திருந்தார்கள் என்றெல்லாம் புறக்காரணிகளை அடுக்கலாம். ஆனால் அவற்றையெல்லாம்விட மிக முக்கியமானது எழுத்து ஆதிக்கக் காரர்களிடமிருந்தது. அது அவர்கள் வீட்டுப்பரணில் பதுங்கியிருக்கும் பூனையைப்போலத் தான் பதுங்கியிருந்தது. இந்திய ஆதிக்கம் என்பது இந்து ஆதிக்கம் தானே. தமிழர்களும் இடைக்காலத்தில் பௌத்த வீழ்ச்சிக்குப் பிறகு காவிமயமாதல் நிகழ்ந்து தமிழகமும் தன்னிலை மறந்த சுடுகாடாக இந்துத்துவ சிந்தனை வெளியில் இருந்தது

அந்தக்காலக்கட்டங்களி தோன்றிய எழுத்து வகைகள் ஆதிக்கவெறி பிடித்தவர்களின் வாழ்வையும் அவர்களின் மொழியும்தான் பதிவாகின.இந்த நிலையில் பொதுவரங்கில் எழுதவந்த பெண்கள் தமிழ்ச்சூழலில் கதைகள் எழுதினார்கள். அதில் அவர்கள் பெண்களை விடுதலைக்கானவர்களாகக் கருதாமல் அவர்களை மற்ற ஆண் எழுத்தாளர்கள் எழுதுவதைபோலவே எழுதினார்கள் என்பதும் கண்கூடு.


தொன்னூறுகளில் தலித் எழுத்து தமிழில் தீவிரமடைகிறபோதுதான் பெண்ணெழுத்தும் தீவிரமடைகின்றது. எப்படி அரசியல்தளத்திலு சமூகத்தளத்திலும் தலித் விடுதலையும் பெண்விடுதலையும் ஒருசேரப் பார்க்கப்படுகின்றதோ அதைப் போலத்தான் இலக்கியத்திலும் பார்க்கப்பட வேண்டும். ஆதிக்கப் புலத்திருந்து கல்வியும் வாசிப்பும் பெண்களுக்கும் தலித்துகளுக்கும் கிடைத்தபோதுதான் அவர்கள் அவர்களுக்கான எழுத்தினை உருவாக்கினார்கள். அந்த எழுத்தின் காத்திரமும் அதன் தேவையும் இன்று சமூகத்தளத்தின் போதாமைகளை எடுத்துப் பேசுகின்றன. தலித் எழுத்தாளர்கள் தொட்ட பிரச்சினைகள் வாழ்வியல் விழுமியங்களாக இருந்து பின்னால் அவை அரசியல் முழக்கங்களாக மாறி அரசின் திட்டங்களாக அவை உருவாகின்றன. இத்தகைய குறைந்தபட்ச சமூக மாற்றத்தையாவது இவ்வகையான எழுத்துக்கள் கொணர்ந்திருக்கின்றன.

இச்சூழலில் பெண்ணெழுத்தின் இன்றைய நிலை யாது என்னும் கேள்வி எழுகிறது. மனுவின் கூற்றுப்படி பெண் பார்ப்பனக் குலத்தில் பிறந்திருந்தாலும் சூத்திரருக்குரிய ஒடுக்குதலுக்கு உள்ளாகிறவளாக இருக்கிறாள். அதனால் பொதுப் பெண்ணியம் எனபதும் அதைச் சார்ந்து இயங்கக் கூடிய இலக்கியத்தளம் மட்டுமே போதும் என்பதையும் தாண்டி தலித் பெண்ணியம் பேசப்படுகிறது. பொதுவான பெண்ணிலக்கியம் தலித் பெண்ணின் விடுதலையைச் சாத்தியப்படுத்துகிறதா? பல பொதுப் பெண்ணிய எழுத்தாளர்கள் மேல்தட்டு மனோபாவதோடு மட்டுமே இயங்குகிறார்கள் என்பதும் கண்கூடு.

தலித் பெண்ணெழுத்து என்பது பொதுப்பெண்ணியத்திலிருந்து எந்தப் புள்ளியில் வேறுபடுகிறது எப்படி அதன் இயக்கம் இருக்கும் என்பது குறித்த பிரக்ஞை ஏதுமற்று சாதி ஒடுக்குமுறைகளையும் அதனால் ஏற்பட்டு துயரவெளிகளையும் ஆக்கங்களாக மாற்றிவிடுவது மட்டுமே ஆகாது. மாறாக பெண் அடக்குமுறைக்கு உள்ளான காலத்தின் சூழ்ச்சிக்குறித்தும் அதன் கூரிய அம்பாகவும் ஆயுதமாகவும் இருக்கின்ற மதம் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தாமல் தலித் பெண்ணெழுத்தும் சாத்தியமற்றுதான் போய்விடும்.

தலித் எழுத்துக்கான தேவை நிறைவடைந்துவிட்டதாகவும் அது தேங்கிவிட்டதாகவும் கூறுபவர்கள் தலித்திய சிந்தனையின் ஆழத்திலிருந்து புறப்படாதவர்கள். அதேபோல்தான் தலித் பெண்ணெழுத்தும். பெண்ணிய எல்லாவாத அடிமைத்தனத்திற்கும் காரணமாய் இருப்பது ஒன்றுதான் அதுதான் இந்து மதம். தீட்டு என்னும் சொல்லைப் பயன்படுத்தி தன் குடும்பத்தில் உள்ள பெண்களையே வீட்டிற்கு வெளியே வைத்ததுதான் இந்து ஆதிக்க மரபு.இதையே சமூகத்திற்குப் பொருத்தினால் சேரி. உழைக்கின்ற பெண்களை அவர்களின் உழைப்பைச் சுரண்டி அவர்களின் உடல் உபாதைகளைப் பற்றிய அக்கறை ஏதுமின்றி புறந்தள்ளிஅவர்களின் வாழ்வாதாரத்திற்குத் தேவையான எல்லாவற்றையும் மறுத்து ஆணை குடும்பத்தை சார்ந்து வாழ்வதுதான் அவர்களுக்கு விதிக்கப்பட்டது என்று சொல்லி பெண் என்னும் உயிரை ஒரு பொருளாகக் கூட மதிக்காததுதான் இந்துத்துவம்.

தலித்துகளும் பெண்களும் இந்துத்துவ ஆதிக்கத்தினால் சமூகத்தின் விளிம்பு நிலைக்குத் துரத்தப்பட்டவர்கள் என்றாகின்றனர். சமூகம் இந்த இந்துத்தத்துவத்தினால் ஜனநாயகமற்றதாய் மாறிவிட்டது. இதைக் கருத்துருவாகக்கொண்டு இந்துமத வெளியேற்றமே சமூக விடுதலை என்றாய்ந்து அதை நிலைநிறுத்த நாக்பூரில் அய்ந்து லட்சம் மக்களோடு புத்த மதத்திற்கு மாறினார் புரட்சியாளர் அம்பேத்கர். இந்துவாகப் பிறந்தேன் அது ஒரு விபத்து; ஆனால் கண்டிப்பாக இந்துவாகச் சாக மாட்டேன் என்று சொல்லி ஏறக்குறைய முப்பது ஆண்டுகால தீவிர தேடலுக்குப் பிறகு பவுத்தம்தான் மானுட விடுதலைக்கு சரியான வழி என்று பிரகடனம் செய்து அதை நிறைவேற்றினார் புரட்சியாளர்.

இந்தப் புள்ளியிலிருந்துதான் பெண்ணெழுத்தைப் பார்க்க வேண்டியுள்ளது. இந்துத்துவம்தான் பெண்ணை மனிதப் பிறப்பிலிருந்து கழித்து வைத்தது. பெண்களை இனப்பெருக்கம் செய்வதற்கும் வயல்வெளிகளில் மாடுகளைப் பயன்படுத்துவதைப்போல வீட்டில் வேலைகளை குறிப்பாக ஆணுக்கான வேலைகளைச் செய்வதற்கும் நிர்பந்தப்படுத்தியது. அவர்களின் உடலைவைத்தே அவர்களைப் புறந்தள்ளியோ அல்லது வன்புணர்வு செய்தோ அல்லது அதைக் கொண்டாடி தன்னின்பத்திற்குப் பயன்படுத்திக்கொண்டது. அந்த உடலைப் பயன்படுத்திதான் இன்றைய நவீன பெண்கவிஞர்கள் ஆண் சமூகத்திற்கு எதிராக எழுத ஆரம்பித்தார்கள்

மயிர்கள் சிரைக்கப்படாத என் நிர்வாணம்
அழிக்கப்படாத காடுகளைப்போல்
கம்பீரம் வீசுகிறது

என்று சுகிர்தராணியால் எழுதமுடிகிறது என்றால் அதை பாலியல் கவிதை என்று சொல்லிவிட முடியாது. மறுக்கப்பட்ட யோனிகளையும் முலைகளையும் பதாகைகளாக உயர்த்துவது என்னும் கருத்தியலின் மூலம் அது. ஆனால் இத்தகைய கவிதைகளை ஆண் அறிஞர்கள் பாலியல் கவிதைகள் என்று வகைமைப்படுத்துகிறார்கள். இத்தகைய கவிதைகள் பாலியல் கவிதைகள் அல்ல அவற்றை பெண்மொழிக் கவிதைகள் என்றும் கூட நாம் அழைக்கலாம். ஆணியத்திற்கு எதிராக இந்தக் கவிதைகள் மாறியிருக்கின்றன. அதுவும் நல்லதுதான். ஆனால் வெறுமனே ஆணியம் அல்லது லிங்கமைய வாதம் என்பது பொதுப் பெண்ணியம். அதில் தலித் பெண்ணியத்திற்கான நுண்ணரசியலைக் கட்டக்கூடிய இடம் இல்லாமலே இருக்கின்றது. சமூக அரசியலில் சமத்தன்மை வருவதற்குப் புரட்சியாளர் அம்பேதகர் சொன்ன இந்துக்களிடமிருந்து விடுதலை என்னும் தத்துவத்தைத்தான் நாம் இங்கே பொருத்த வேண்டும். ஆணியம் என்பது இந்துத்துவத்தின் ஓர் ஏற்பாடு.

ஆக, பெண்ணெழுத்து எதை மோதி உடைக்க வேண்டும் என்றால் இந்துத்துவத்தை. அதன் கூறாக இருக்கின்ற இந்துமதத்தை. அதன் முகமூடியாக இருக்கின்ற இந்துத்துவ பயங்கரவாத அரசியலை. அதன் இயங்குதளமாக இருக்கின்ற இந்துப் பண்பாட்டு முதல்வாதத்தை. என்ன நடக்கிறது உண்மையிலே என்று பார்த்தால் பொதுவான பெண் ஆக்கவாளிகள் யாரும் தங்களுடைய இந்து அடையாளத்தை துறந்தாரில்லை. அகில இந்திய அளவில் அரசியலில் இந்து அரசியலுக்கு எதிராகப் பார்க்கப்படுகின்ற பிருந்தா காரத் கூட இந்து அடையாளமாகிய பெரிய பொட்டோடுதான் காட்சி தருகிறார்கள். இந்துத்துவம் சொன்ன பெண் அடையாளங்கள் அனைத்தும் பெண் ஆக்கவாளிகளிடத்தில் இருக்கின்றன. புற அடையாளங்களான உடைகளில் மாற்றங்கள் இருக்கின்றன. இது இப்போது எந்தவிதமான சமூக அக்கறையுமின்றி குடும்ப அடிமைகளாக இருக்கின்ற பெண்கள்கூட அழகியலை முன்னிருத்தி இத்தகைய புற அடையாள மாற்றங்களோடுதான் இருக்கின்றார்கள்.

சமூக முன்னனியினராக இருக்கக்கூடிய பெண் ஆக்கவாளிகள் எந்நிலையிலிருந்து தங்கள் முன்னெடுப்பைத் தொடுப்பது என்பதுதான் நம் வினா. தலித் அரசியல் நிலையில்தான் அதனை முன்னெடுக்கவேண்டும். அரசியலில் எத்தனையோ உயர்பதவிகளில் தலித்துகள் இருக்கின்றார்கள். பெரும்பணக்காரர்களாகவும் இருக்கின்றனர் ஆனால் அவர்களின் மீதான சாதி இழிவு போய்விட்டதா என்றால் இல்லை எல்லாரும் ’அவங்கதான்’ என்றுதான் இன்றளவும் பேசப்படுகிறார்கள். பெண்களும் அப்படித்தான் பெரும்பதவிகளும், செல்வங்களும் இருந்தாலும் பெண் என்னும் எண்ணம்தான் எப்போதும் இருக்கின்றது. பவுத்தர்களாக மாறியபிறகு தலித்துகளுக்கான சமதர்ம வாழ்வு சாத்தியப்படுகிறது, பிற மதங்கள் எல்லாம் இங்கு இந்து சாயலில்தான் இருக்கின்றன.

பெண் அடையாளத்தினை அறிவுத்தளத்திலும் சமூகத்தளத்திலும் நாம் மாற்ற வேண்டியுள்ளது. பாமா,சிவகாமி போன்ற தலைமுறையினர் தலித் இலக்கியத்தின் இயங்குதளத்தினை வெகு ஆழமாக்கி வைத்திருக்கின்றனர். சுகிர்தராணி போன்றோர்கள் பெண்மொழிக்கவிதைகளை அதன் வீரியத்தோடு ஆக்கி இருக்கின்றனர். பெண்ணெழுத்தை அடுத்த நிலைக்கு கொண்டு செல்ல இந்துத்துவத்திற்கு எதிராக ஆக்கங்களை உருவாக்கும் ஆளுமைகளாக இவர்கள் மாறவேண்டும். பௌத்தம் பேசும் ஆக்கங்களை இவர்கள் தர வேண்டும். பௌத்தமீட்சி ஒன்றுதான் தலித்துகளையும் பெண்களையும் விடுவிக்கும். அதற்கான ஏற்பாடுகளோடு பெண்ணிலக்கியம் பயணப்படவேண்டும். அது இந்தத் தலைமுறை ஆக்கவாளிகளில் கு.உமாதேவியின் கவிதைகளில் வந்துகொண்டிருக்கின்றது என்று நான் அவதானிக்கிறேன்.
Posted by பறை at 6:31 PM 1 comments Links to this post
Friday, February 19, 2010
தருணம்
தருணத்தின் அமைவு கிட்டாத எதுவும்
இன்மையோடு தொடர்கிறது
வந்ததிலிருந்தே வருகை குறித்த பெருமிதம்
மிகைந்து அழிகிறது துளித்துளியாய்
போகையில் அழிந்த எந்த துவாரமும்
காற்றையோ
நீரையோ
கொண்டு செல்வதில்லை
வருகையில் மிஞ்சும் போவதைக்
குறித்த எந்த பிரக்ஞையுமின்றி
இருக்கின்றோ மெல்லாம் நாம்
Posted by பறை at 9:17 AM 1 comments Links to this post
Thursday, February 4, 2010
ஏதோ

தீர்க்கமானக் கோடுகளால் வரையக்கூடியன
அல்ல அவை
பகடிகளற்ற சொற்கள் உலவும் வனம்
பிசிறுகள் சற்றேனும் இல்லா மேகம்
ஊறிய தேனில் மிதக்கும் மதுரம்
யாருமற்ற வெளியொன்றின் மௌனம்
எல்லாவற்றிலும்
இருக்கும் உன் எஞ்சிய அழகிடை
என்ன இருக்கின்றடு இன்னும்

Thursday, May 6, 2010

அப்படி இன்னும் தெரியவில்லை யாருக்கும்
கடந்தவைகளின்மீதும்
நிகழ்பவைகளின்மீதும்
வினையாற்றும் விவரம்
கருமையின் இருப்பாயிருக்கும்
காலமேகம் பொழியும் மழையின் துயரம்
வேர்களை வேட்டையாடும் பொழுது எதுவாயினும்
அதில் நிகழும் மாற்றத்தின் குடியமர்ந்து
வாழும் குயிலின் பாடலைப் போல
அமைந்திருக்கும் வாழ்வு

Wednesday, December 17, 2008

தமிழ் படைப்பாளிகளின் கவிதைப் போர் : காலத்தின் எழுத்து

காலத்தின் நீண்ட மௌனத்தை எறிந்து தங்கள் குரலைப் பதிவு செய்து இருக்கின்றனர் தமிழின் தீவிர படைப்பாளிகள். அரை நூற்றாண்டாய் துயரத்தின் மீது தகிக்கும் ஈழத்தமிழர்களின் இன்னல்கள் பதினேழு கிலோமீட்டர் தூரத்தில் இருக்கின்ற தமிழர்களின் மனங்களில் ஆழமான பாதிப்பினை ஏற்படுத்தவில்லை என்பதே உண்மை. தொடக்க காலங்களில் இலங்கையில் வெலிக்கடைச் சிறையில் அநியாயமாகக் கொலை செய்யப்பட்ட குட்டிமணி ஜெகன் மறைவுக்குப் பிறகு ஒரு பெரும் எழுச்சி ஈழத்தமிழர் பிரச்சனையில் இங்குள்ள தமிழருக்கு ஏற்பட்டது. அது தமிழக அரசியலில் ஒரு பகடைக்காயாக மாற்றப்பட்டது. அதற்குப் பிறகு தமிழ் தேசியம் பேசும் இயக்கங்கள் மட்டுமே ஈழப்பிரச்சனையில் தொடர் அக்கறையை செலுத்தி வந்தன என்றால் அது அவ்வளவு தவறில்லை. கொடுங்கனவாய் முடிந்துப் போன ராசீவ் காந்தி மரணத்துக்குப்பிறகு ஈழத்தமிழர் பிரச்சனைப் பற்றிப் பேசுவது அனேகமாக ஒரு முடிவுக்கு வந்துவிட்டது எனலாம்.
துன்பப்படும் மக்கள்துயரின் காத்திரத்தைப் பேசினால் கூட விடுதலைப் புலிகளின் ஆதரவாக அது மாற்றப்பட்டது. வைகோ,நெடுமாறன் போன்றோர் பேசியதற்காகவே நெடு நாளைய சிறை தண்டனையைப் பெற்றனர். பிறகான காலக்கட்டங்களில் எத்தனையோ அழிவுகளை சிங்கள பேரினவாத ராணுவம் தமிழ்மக்கள் மீது நடத்தியது. யாழ் நூலக அழித்தொழிப்பு,செம்மணி புதைகுழி,செஞ்சோலைக் குழந்தைகள் படுகொலை என்று பட்டிலிடமுடியாத எத்தனையோ அழிசெயல்களை இலங்கை ராணுவம் செய்தது. உலக அரங்கில் அதற்குப் பின் இப்போது ஈழத்தில் நடந்துவரும் கடும்போரில் தமிழருக்கு ஏற்பட்ட பேரிழப்புகள் எல்லாம் இங்குள்ளவர்களின் மனசாட்சியை உலுக்க திரண்டது மக்கள் எழுச்சி.ஒரு சில அரசியல் கட்சிகள் தவிர மற்றைய கட்சிகள் தமிழீழம் என்ற கருத்தி உடன்பாடில்லாத இடதுசாரிகள் கூட இந்த எழுச்சியில் பெரும் அக்கறைக் காட்டினர். தீவிரமாக அரசும் இதில் கவனம் செலுத்தியது. அனைத்துக்கட்சிக் கூட்டம் நடத்தி போர் நிறுத்தத்தை வேண்டி மத்திய அரசை வலியுறுத்தியது.
இந்நிலையில் தமிழ்த்திரையுலகின் போராட்டம் குறிப்பிடத்தக்கது.அக்டோபர் 19ந் தேதி ராமேஸ்வரத்தில் நடைப்பெற்ற திரை உலக போராட்டத்தில் ஏற்பட்ட எழுச்சி தமிழ் மக்கள் உள்ளத்தில் உள்ள அச்ச உணர்வினை நீக்கியது. இயக்குனர்கள் சீமான்,அமீர் போன்றோரின் வரலாற்று ரீதியான அரசியல் விரவிய உரை தமிழ் இளைஞர்கள் மட்டுமல்ல பொதுமக்கள் உள்ளத்திலும் பொதுவான அறத்தன்மையை ஏற்படுத்தியது. அதற்குப்பிறகான அனைத்துக் கட்சியின் தமிழர் சங்கிலிப் போராட்டம் கொட்டும் மழையில் 100 கி.மீ தூரத்திற்கு நடைபெற்றது.
தொடர்ந்துப் பல்வேறு மக்கள் அமைப்புகள் ஈழத்தமிழர்களின் ஆதரவுக்குரலை உயர்த்தியது.ஆனால் அறிவுலகம் எனப்படும் படைப்பாளிகள் அடர்ந்த மவுனத்தைக் கடைப்பிடித்தனர். பாப்லோ நெரூடா, மொகமத் தார்வீஷ் போன்றோரின் கவிதைகளையும் சேகுவேராவின் புரட்சியையும் சாவேசின் அமெரிக்க எதிர்ப்பையும் சிலாகித்து பத்திகளாக கட்டுரைகளாக எழுதிக்குவிக்கும் தமிழ் எழுத்துலகம் தலித்துகளின் மீதான வன்முறையானாலும் சரி வேறுஎந்த பிரச்சனையிலும் தன்னை உட்படுத்திக்கொள்ளாத எச்சரிக்கை உணர்வுடனேதான் இயங்கிவந்திருக்கிறது. 19 ஆண்டுகாலமாக தலித் மக்களைப் பிரித்துவைத்த உத்தபுரத்தின் சுவர் வெளிச்சத்திற்கு வந்தபின் எத்தனை தமிழ் படைப்பாளிகள் தங்கள் வருத்தத்தையோ கோபத்தையோ பதிவு செய்தனர்? கயர்லாஞ்சியின் கொடுமைக்கு நீதிமன்றத்தின் தீர்ப்பு வந்து குற்றவாளிகளுக்கு தண்டனை அறிவிக்கப்பட்டும் படைப்பாளிகள் ஒரு இயக்கமாகி ஏதும் சொல்லவில்லை.அதே போல ஒரிசா கர்நாடகாவில் கிறித்தவர்கள்மீது நடத்தப்பட்ட தாக்குதல்களை படைப்பாளிகள் அரங்கம் கண்டுகொள்ளவில்லை.
உலக அளவிலான வன்முறைகளயும் விடுதலைப்போராட்டங்களையும் மாங்கிமாங்கி எழுதும் நம் படைப்பாளிகள் நம் மொழியைப் பேசுகின்ற சொந்த சகோதரர்கள் துன்பப்படும்போது வாய்மூடி இருப்பதான கோரம் வேறு எதுவுமில்லை.
அதைத்தான் இக்கட்டுரையின் முதலில் சொல்லியிருந்தேன்.மவுனத்தைக் கலைத்த கவிஞர்கள் லீனா மணிமேகலைக்கும் சுகிர்தராணிக்கும் நன்றியைத் தெரிவிக்கலாம்.
இவர்கள் ஒருங்கிணைத்த தமிழ் படைப்பாளிகள் பங்கேற்ற கவிதைப் போராட்டம் சென்னை காந்தி சிலை அருகில் நடைப்பெற்றது. காவல்துறையின் அனுமதிப் பெறுவதற்கு பெரும்பாடு பட்டதாக அவர்கள் கூறியது தமிழ்நாட்டில் தமிழர்களாகத்தான் நாம் வாழுகிறோமோ என்ற அய்யத்தை எழுப்பியது. அதற்கான நிபந்தனைக் கடிதத்தையும் படித்தபோது அந்த உணர்வு இன்னும் மேலோங்கியது.
தமிழ் படைப்புத்தளத்தில் இயங்கிக்கொண்டிருக்கும் முக்கிய படைப்பாளிகள் அனைவரும் வந்திருந்தனர். ராமேசுவரத்திலிருந்தும் இன்னும் பல மூலைகளிலிருந்தும் படைப்பாளிகள் வந்திருந்தது சிறப்பு. எந்தவிதமான அறிக்கையோ சுவரொட்டியொ இல்லாமல் வெறுமனே தொலைபேசி, குறுஞ்செய்திகள் ஆகியன மூலமே தகவல் பரப்பப்பட்டு இந்த நிகழ்ச்சி ஒருங்கிணைக்கப்பட்டது. நிகழ்ச்சிக்குத் தலைமை என்று எந்த அரசியலும் இல்லாமல் அனைவருக்கும் பொறுப்பு இருக்கிறது என்று சனநாயகத்தன்மை இருந்தது படைப்பு நேர்மையைக் காட்டியது.
கனிமொழியும் தமிழச்சியும் மிகவும் தங்களுக்குரிய அரசியல் அதிகாரங்களைத் துறந்து படைப்பாளிகள் என்ற அடிப்படையில் இந்த நிகழ்வில் பங்காற்றியது அடுத்த தலைமுறை அரசியலின் போக்கை கணிக்கவைத்தது.
எழுத்தின் ஆங்காரத்தோடு ஒரு பயணியாக அறியப்படும் கோணங்கி நவீன கவிதைத் தளத்தில் மட்டுமே இயங்கக்கூடிய இன்னும் பிற கவிஞர்கள் இந்த நிகழ்வில் பங்குபெற்றதும் குறிப்பிடத்தக்கது. மிக முக்கியமான கவிஞர்களும் எழுத்தாளர்களும் இந்த நிகழ்வில் பங்காற்றியது பெருமைக்குரியதும் பொறுப்பானதும் ஆகும்.

Tuesday, December 2, 2008

தமிழ்க் கவிஞர்களின் குரல் ஒலிக்கும் தருணம்

நாள் : 07.12.08
காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை.
காந்தி சிலை அருகில், மெரினா கடற்கரை, சென்னை


நவீன தளத்தில் இயங்கக்கூடிய தமிழ் கவிஞர்கள் முதல் முறையாக சென்னையில் ஒரு கூடுகையை நடத்துகின்றனர். வெறுமனே பயிற்சி பட்டறைகளையும் குளிரூட்டப்பட்ட
அறைகளில் கவிதைகளை வாசித்தும் நிகழும் நிகழ்ச்சியாக இல்லாமல் புது தளத்திலே இந்த நிகழ்ச்சி நடைபெறவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. அதுமட்டுமல்ல இந்த நிகழ்ச்சி
ஒருநாள் முழுக்க சென்னை மெரினா கடற்கரையில் நடைபெறவுள்ளது. 100 கவிஞர்கள் கவிதைகளை வாசிக்கப்போகின்றனர். ஈழத்தில் நிகழ்ந்துக் கொண்டிருக்கும் இனப்படு
கொலையின் கோரத்தை அதன் கொடூர மனப்போக்கை மொழி இனம் தேசம் என்ற எல்லைகளைக்கடந்து மனிதர்கள் என்னும் அடிப்படையில் அங்கு போர் நிறுத்தம் நடைமுறைப்
படுத்தப்பட வேண்டும் என்றும் இந்த ஒரு நாள் நிகழ்ச்சி நடைபெற இருக்கின்றது.
ஈழப்பிரச்சனையில் இந்தியா தலையிடக் கோரி பல்வேறு நிலைகளில் அரசியல் அரங்குகளில் தற்போது போராட்டங்கள் நடைப்பெற்றுக்கொண்டிருக்கின்றன. திரையுலகினில் பல
மட்டங்களில் இதற்கான போராட்டங்கள் நிகழ்ந்தன. அதுமட்டுமல்ல தங்களின் இனவுணர்வினால் அரசின் கெடுபிடிகளால் இயக்குனர்கள் சீமான்,அமீர் போன்றோர் கைது செய்யப்பட்டு
இன்றுவரை வழக்குகளைச் சந்தித்து வருகின்றனர். இந்நிலையில் தமிழ் அறிவுச்சூழலிலிருந்து எந்தக் குரலும் இதற்காக ஒலிக்கவில்லை என்ற வெற்றிடம் நிரம்பியிருந்தது.
மொழியின் குழைவுகளிலும் அதன் தீராத சமவெளிகளிலும் தங்களைக் கட்டமைக்கிற படைப்பாளிகள் ஏன் இப்படி அமைதிக்காக்கின்றனர் என்ற கேள்வி வாசகத்தளத்திலும்
இருந்துவந்தது. நடிகர்களுக்கு இருக்கும் உணர்வு வெளிப்பாட்டுத் தன்மை உணர்வுகளையே வாழ்வாகக் கொண்டு படைப்புக்கலனாகக் கொண்டு இயங்கும் தமிழ் படைப்பாளிகளுக்கு
இல்லையோ என்ற ஏக்கம் இருந்தது.
அந்த எதிர்ப்பார்பை நிறைவு செய்யும் வகையில் மட்டுமில்லை உள்ளப்பூர்வமாக படைப்பாளிகள் வெறும் காகிதத்தில் மட்டுமில்லை தேவையானால் களத்தில்கூட இறங்கக்கூடியவர்கள்
என்ற பொறுப்பினை உலகுக்கு எடுத்துக்காட்ட சில பெண் படைப்பாளிகள் ஒன்று கூடி இந்த நிகழ்ச்சிக்கான முன்கையை எடுத்து தொடர்ந்து செயலாற்றிவருகின்றனர்.அவர்கள்
பாராட்டுக்குரியவர்கள். நாம் வேண்டுகின்ற நியாயமான பெண் தலைமை இங்குதான் தொடங்குகின்றது என்று நான் கருதுகிறேன்.அதற்காகவே இந்தப் போராட்டத்தில் அனைவரும்
கலந்துக்கொள்ளவேண்டும் என்பதும் அவா. கோரிக்கையின் நியாயம் வலியுறுத்துகிற அவசியம் மிகவும் முக்கியமானது. நெடுங்காலம் அவதியுறுகிற மக்களின் பின்னால் நிற்பது
மனிதத்தன்மை. அதனடிப்படையிலும் இந்த நிகழ்வு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கிறது.
நர்மதா நதிப்பிரச்சனையிலும் காஷ்மீர் பிரச்சனையிலும் அப்சல் குருவின் தூக்கு தண்டனைக்குறித்த பிரச்சனையிலும் தன்னுடைய கருத்தினை வலுவாக வைத்து ஒரு எழுத்தாளர்
எவ்வளவுதான் புகழ் அடைந்திருந்தாலும் அதை தூக்கி தூரவைத்துவிட்டு துயரப்படும் மக்களுக்காக பாடு எடுக்கக்கூடிய பண்பு அருந்ததிராயின் ஆளுமையை வெளிபடுத்தியது. அவருடைய
கருத்துக்களால் அப்பிரச்சனைகள் மீதான கவனத்தின் வெளிச்சம் மிக அதிகமாக குவிக்கப்பட்டது. அந்த வகைமையில் இப்போது ஈழத்தமிழ் மக்களுக்காக தமிழ் இலக்கிய படைப்பாளிகள்
தங்கள் குரல்களை படைப்புகளின் வழியாக வெளிப்படுத்த ஒரு போராட்ட வடிவமாக கவன ஈர்ப்பின் குவிமையமாக அது அமைய இருக்கிறது
இத்தகைய நிகழ்வுகள் தமிழ் இலக்கிய உலகில் மட்டுமல்ல உலகளாவிய மக்களின் உணர்வுகளை வெளிப்படுத்தும் வடிவமாக மாற இருக்கிறது. உலக தமிழர்களின் கவனத்தை
ஒரு புள்ளியில் மையப்படுத்தும் இந்நிகழ்வு தமிழ் இலக்கிய உலகில் மட்டுமல்ல அரசியல் தளத்திலும் அதிர்வுகளை ஏற்படுத்தலாம். இதற்கான முன் முயற்சியில் ஈடுபட்டுள்வ்ள தோழர்கள்
ஒவ்வொருவரும் போற்றுதலுக்குரியோர்.போற்றுகிறோம்.