Sunday, September 30, 2012

மழைப்பயணம்

மழையின் சப்தம் கூரையில் விழுந்து கேட்கிறது
இருளை ஈரமாக்கி அதன் எடையைக் கூட்டுகிறது குளிர்
மழைத்துளிகளின் பலம் தாளாமல் வளைந்து கொடுக்கின்றன தளிர்கள்
முட்டைகளை பத்திரமாக்கத் தவிக்கிறது காகம்
கொய்யா மரத்தின் அணிலின் வால் நனைந்திருக்கும்
நேற்று ஈரப்பதத்தில் நட்ட மணிச்செடி மழையின் நீர் உறிஞ்சுகிறது
குருவியின் இறகொன்று தொப்பலாய் நனைந்து மாமரத்தின் தண்டில்
ஒட்டிக் கொள்ள  பயந்து கிளம்புகின்றன எறும்புகள்
மழை நீரைக் குடித்த மண்குழிகள் நிறைந்து மகிழ்கின்றன
அழகிய மழை பொழியும் இந்த இரவின் அடர்ந்த ஏகாந்தத்தில்
நீ வருகிறாய் நினைவுகளில்
மழைச்சாரல் வராமல் பேருந்து சன்னல் கண்ணாடியை இறக்கிய
பயண நினைவுகளோடு
கண்ணாடியில் வழிந்துகொண்டிருந்த மழைத்தாரைகளை மறித்து
ன் மாவிலைக் கண்களில் தீட்டுகிறேன்.