Friday, December 30, 2022

2022 - 2023

 இந்த ஆண்டின் இறுதி நாள் இது. 2022 ஆம் ஆண்டு பல நிகழ்வுகள் நடந்தன. தனிமனித வாழ்வில் எனக்கு எந்தவிதமான மாற்றமும் இல்லை. உடல்நிலை முன்னேற்றம் கண்டிருக்கிறது. நிறைய நிகழ்வுகளில் பங்கேற்றேன். இவ்வாண்டின் இறுதியில் மார்கழியில் மக்களிசை நிகழ்ச்சியிலும் எழுச்சித் தமிழரோடு  பேரா.வெற்றிச் சங்கமித்திரா அவர்களின் என் பார்வையில் எழுச்சித் தமிழர் என்னும் நூல் வெளியீட்டு விழாவிலும் பங்கேற்றேன்.

இன்னும் முன்னெற்றங்களை வருகின்ற 2023 எனக்குத் தரும் என்று நம்புகிறேன். மேலும் நூல்கள் பல எழுத, திரைப்படம் சார்ந்து வேலைகள் செய்ய, அரசியலில் ஓரிடத்தை அடைய சமூகப்பணியிலும் தொடர்ந்து இயங்கிட மனம் நினைக்கிறது.

பல படைப்புகள் இதழ்களில் வெளியிடப்பட வேண்டும். அதற்காக ஒரு பக்கம் வேலை செய்ய வேண்டும். புதிய தொழில் நுட்பங்களைப் பயன்படுத்தும் சமூக ஊடகங்களையும் உருவாக்க வேண்டும்.

பார்க்கலாம்

முடியும்.