Tuesday, November 30, 2010

யாழன் ஆதி: அ. முத்துகிருஷ்ணனின் பயணம் - ஒளியுடன் வழி

யாழன் ஆதி: அ. முத்துகிருஷ்ணனின் பயணம் - ஒளியுடன் வழி

அ. முத்துகிருஷ்ணனின் பயணம் - ஒளியுடன் வழி


சமீபத்தில் அ.முத்துகிருஷ்ணனின் மொழிபெயர்ப்பு நூல் ஒன்று வந்தது. அருந்ததி ராயின் கட்டுரைகளை மொழிபெயர்த்து எழுதியது.அதன் தலைப்பு தோழர்களுடன் ஒரு பயணம். தூரங்களில் அல்லல்படும் மக்களுக்காகக் குரல் கொடுக்கும் அறிவாளர்கள் மத்தியில் முத்துகிருஷ்ணன் தீவிரமான ஆளுமை. தற்போது ஆசியாவிலிருந்து காசாவிற்குச் செல்லும் ஆசிய கண்டத்தின் அறிவாளர்கள் குழுவில் தமிழ் எழுத்தாளர் அ.மு. பங்கேற்கின்றார். டிச.2ந்தேதி டில்லியிலிருந்து அவர் பயணம் தொடர்கின்றது. தரை வழியாக அவர் பாகித்தான். ஈரான், துருக்கி, சிரியா, லெபனன், ஜோர்டன், எகிப்து என பல நாடுகளைக் கடந்து அவர்கள் காசாவை அடைகின்றனர்.

துன்பப்படும் காசா மக்களுக்காகவும் பாலத்தீனத்தின் நிலையை உலகுக்கு உணர்த்தவும் இந்தப் பயணம். இது முக்கியமானது. வழியெங்கும் உள்ள பல்வேறு நாடுகளில் அம்மக்களுக்காக நிதித்திரட்டும் நிகழ்ச்சிகள் நிவாரணப் பொருட்களைச் சேகரித்தல் எனவும் அவர்கள் நிகழ்ச்சியை வடிவமைத்திருக்கின்றார்கள். மிகவும் போற்றுதலுகுரியது இது. இத்தகைய அறிவாளர்கள் ஒருமுறை இலங்கையை நோக்கியும் செல்லலாம். இந்தியா முழுமையும் உள்ள சேரிகளுக்கும் செல்லலாம் சாதிக் கொடுமையின் தன்மையை உலகுக்கு உணார்த்தும் இத்தகைய பயணத்தை இந்தியாவில் இருக்கின்ற அறிவாளர்கள் இந்தியாவிற்குள்ளாவது நடத்தினார்கள் என்றால் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

அதற்கான முன்னோடிப் பயணமாக இதை நாம் முன்வைக்கலாம். தோழர் முத்துக் கிருஷ்ணன் அதற்கான அனுபவச் சேகரிப்பில் இந்தப் பயணத்தை அவர் தொடர வேண்டும். அவருடைய இந்தக் கனவு, மாந்தநேயப் பணி தமிழ் எழுத்தாளர்களுக்கு கிடைத்த வெகுமானம்.தோழர்களுடன் ஒரு பயணத்தை மேர்கொண்ட முத்துகிருஷ்ணனை வாழ்த்துகிறோம்.

காசா மக்களுக்கு உதவ நினைப்பவர்கள் அ.மு. வைத்தொடர்புகொள்ள வேண்டும். அவருடைய வேண்டுகோளையும் இத்துடன் இணைத்துள்ளோம்



பாலஸ்தீன மக்கள் கடந்த அறுபது ஆண்டுகளாக அனுபவித்து வரும் துயரவாழ்வு இன்று உலக மக்கள் நன்கு அறிந்த ஒரு விஷயமே. நம் அவசரமான வாழ்வில் அவர்களின் கதையை செவி மடுத்து கேட்க அவகாசம் இல்லாத அளவுக்கு உலகம் அதிவேகமாக இயங்கிக்கொண்டு இருக்கிறது. தினந்தோறும் அங்கு பெரும் குண்டு வெடிப்புகளின் ஓசையுடன் தான் அவர்களின் காலை பொழுது விடிகிறது.

கடந்த அறுபது ஆண்டுகளில் தங்களின் சொந்த நிலத்திலேயே அகதிகளாக அலைகழிக்கப்படுவது மட்டுமின்றி மெல்ல மெல்ல தங்களின் நிலத்தையும் பறிகொடுத்து சிறு கீற்றான நிலப்பகுதிகளுக்குள் சிறை வைக்கப்பட்டிருக்கிறார்கள். சிறு காலனிகளாக குடியேறி மெல்ல மெல்ல பாலஸ்தீன மக்களின் நிலத்தை அபகரித்து இஸ்ரேல் உலக வரைபடத்தில் தன் இருப்பை ஏற்படுத்தி பின்னர் நிலைப்படுத்திக் கொண்டது. 1950கள் முதல் 2010 வரையிலான உலக வரைபடங்களை சேகரித்து அதனை ஒப்பிட்டு பார்த்தால் இந்த உண்மை யாவருக்கும் விளங்கும்.

15 லட்சம் மக்கள் வாழும் காசா பகுதி இருப்பதிலேயே மிகவும் துயர மேகங்கள் சூழ்ந்த பகுதி. இந்த காசா மக்களுக்கு நிவாரணம் வழங்கவும் பாலஸ்தீனத்தின் நிலையை உலகிற்கு எடுத்துரைக்கவும் ஒரு பயணத்தை மேற்கொள்வது என ஆசியாவில் உள்ள முற்போக்காளர்கள் சிலர் தீர்மானித்த அது இப்பொழுது செயல் வடிவம் பெற்றுள்ளது..

எகிப்தின் அல்-அரீஷ் துறைமுகத்திலிருந்து கப்பலில் நிவாரணப் பொருட்களை ஏற்றிக் கொண்டு காசாவை சென்றடைந்து பயணக் குழு 2011 புத்தாண்டை அந்த மக்களுடன் கொண்டாட இருக்கிறது.

பாலஸ்தீன நிவாரண நிதிக்காக மக்களிடம் நன்கொடைகளை திரட்டி வருகிறோம். இந்த நிதி துயருற்ற மக்களுக்கானது, மருந்துகள், கட்டுமான பொருட்கள் என அவர்களின் அன்றாடங்களை சீர்படுத்தும் பல பொருட்களை வாங்குவதற்கு இந்த நிதி செலவிடப்படும்.

நிதி அளிக்க விருப்பம் உள்ளவர்கள்



A.MUTHUKRISHNAN +919443477353 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம். அல்லது பணத்தை A.MUTHUKRISHNAN State Bank of India SB A/C no 30322814376 வங்கி கணக்கில் நேரடியாக செலுத்தலாம். அல்லது A.MUTHUKRISHNAN பெயரில் காசோலை எடுத்து அனுப்பலாம்.



துயருற்ற மக்கள் மீது நிஜமான அக்கறையும் மனித அவலங்கள் குறித்து மனசாட்சியும் விழிப்புணர்வும் உள்ள அனைவரும் தங்களால் ஆன நிதியை அளிக்க வேண்டுகிறேன்



அ.முத்துகிருஷ்ணன்

Friday, October 15, 2010

வழிதல்


நீரற்ற பெருவெளியெங்கும்
அலைந்த கால்கள்
திணறும் நடுநேரத்தின் வெப்பத்தில்
திளைக்கும் உடல்கள்
களைத்திருந்தன
கால்களின் வழியேறிய வெம்மையின்
திறவுகோல்களை சுழற்றி வீசிய
விரல் பிடித்து அனுப்புகின்றேன்
உன்னை.

யாழன் ஆதி: தண்டனை

யாழன் ஆதி: தண்டனை

Wednesday, October 6, 2010

தண்டனை

மழையில் நனையாததைக்
கண்டித்து
தலையில் குட்டியது
மரத்திலிருந்த துளியொன்று

Wednesday, September 15, 2010

நூலாறு: வறண்ட நிலத்தில் பாய்ந்த வெள்ளம்





வேலூர் வாசகர் பேரவையும் ஆழி அறக்கட்டளையும் வேலூர் மாவட்ட நிர்வாகத்தின் உதவியோடு வேலூரில் புத்தகத் திருவிழாவை நடத்தின. வேலூர் மாவட்ட மக்களுக்கு இது மிகப்பெரிய பரிசாகத்தான் இருந்தது.

கலை இலக்கியத்தைப் பொருத்தவரை வேலூர் மாவட்டத்தை வறட்சி மாவட்டம் என அறிவித்துவிடலாம். திருநெல்வேலி மாவட்டத்தைப் பற்றிப் பேசும்போது எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வன் அவர்கள் கலைஞர்களை லாரியில் தான் ஏற்றிவர வேண்டும் என்பார். ஆனால் வேலூர் மாவட்ட கலைஞர்களை ஆட்டோவிலேயே ஏற்றிக்கொண்டு சென்றுவிடலாம். அவ்வளவு குறைவானர்கள்தான் எழுத்துலகிலும் திரையுலகிலும் இருக்கின்றனர். இதற்குக் காரணத்தை மிக எளிதாக நாம் அலசிவிடலாம். வேலூர் மாவட்டம் அரசியல் விழிப்புணர்வு பெற்ற மாவட்டம். அது மட்டுமல்ல தொழிற்சாலைகள் நிறைந்த மாவட்டம். இங்கு வாழ்வியல் என்பது தொழிற்சார்ந்த பண்பாட்டு முறையால் பொருளீட்டி அதன்மூலம் வசதிகளைப் பெருக்கிக்கொள்வது என்பதுதான். எனவேதான் ஆக்கவாளிகளுக்கு ஊக்கம் தரக்கூடிய வாழ்வியல் இல்லாததுதான் அதற்குக் காரணம்.

எனவே புத்தக வாசிப்பு என்பது மிகவும் குறைவு. தற்காலங்களில்தான் நவீன இலக்கியம் சார்ந்த படைப்பாளிகள் வேலூர் மாவட்டத்தில் தோன்றியுள்ளனர். அவர்களின் ஆக்கங்களும் பரவலாக அறியப்படுகின்றன. அதற்கு முன் இலக்கிய ஆளுமைகள் இல்லையா என்று தோன்றுகின்றது உங்களுக்கு. இருந்தார்கள் வானம்பாடி கவிஞர்களின் முக்கிய கவியாகச் திகழும் கவிக்கோ அப்துல்ரகுமான், கவிமாமணி அப்துல்காதர் ஆகியோரும் அவர்களைப் பற்றித் தொடர்ந்த என்னைப் போன்றவர்களும் இருந்தார்கள். ஆனால் நடந்த தவறு என்னவென்றால் இவர்கள் இருவரும் திராவிட இயக்க தீவிர பிரச்சாரகர்களாக இருந்தனர். அப்துல் ரகுமான் எழுதினார் என்றால் அப்துல்காதர் பேசினார். மேடைகளிலும் வகுப்பறைகளிலும் இவர்கள் தீவிர இலக்கியம் பேசியதைவிட அரசியல் பேசியதே அதிகம். ஆனால் இருவருமே தமிழ் இலக்கியத்திலும் ஆக்கத்தன்மையிலும் அற்புதமானவர்கள். அப்துல்காதர் அவர்கள் பேசுவதில் செலுத்திய அக்கறையையும் கடத்திய நேரத்தையும் எழுதுவதில் செலுத்தியிருந்தால் தமிழுக்கு இன்னும் வளம் சேர்ந்திருக்கும். அவருடைய படிமங்கள் உவமைகள் விவரிக்க முடியாத உணர்வுகளைத் தரக் கூடியன.

இதனால் நிகழ்ந்தது என்னவென்றால் வேலூர் மாவட்டத்தில் பட்டிமன்ற பேச்சாளர்கள் அதிகம் வளர்ந்தனர். கோவில் திருவிழாக்கள் போன்ற பொது நிகழ்வுகளில் பட்டி மன்றம் கண்டிப்பாக நிகழ்ச்சி நிரலில் இருந்தது. இந்த இருவரின் ஆக்கிரமிப்பால் இக்பால் என்னும் ஒரு நுட்பமானக் கவிஞன் இலக்கிய உலகில் அறியப்படமுடியாமலேயே ஆகிவிட்டது எனவே தீவிர இலக்கியத்திற்கு எதுவும் வேலூர் மாவட்டத்தில் இல்லாமல் போனது.

நவீன எழுத்தின் அறிமுகம் என்பது வேலூர் மாவட்டத்திற்கு வாணியம்பாடியில் நிகழ்த்தப்பட்டது. அதனால் நிறைய ஆக்கவாளிகள் கிடைத்தார்கள் நேசன், குலசேகரன், நீல்கண்ட், போன்ற கவிஞர்கள் கிடைத்தார்கள். இன்னொரு பக்கம் தீவிர தமிழ்த்தேசியம் பேசக்கூடியவர்கள் ஈழவிடுதலையை முன்னிட்டு எழுதியும் நிகழ்ச்சிகளை நடத்தியும் வந்தனர். அவர்களும் எளிமையான அதே நேரத்தில் அரசியல் முழக்கங்களை முன்வைத்து எழுதினர். இவர்களே பின்பு ஹைக்கூ போன்ற வடிவங்களில் கவிதைகள் எழுதிவந்தனர்.

தலித்திய எழுச்சி ஏற்பட்டபிறகு அழகியபெரியவன்,சுகிர்தராணி, யாழன் ஆதி போன்றோர் எழுதவந்தனர். இதில் அழகியபெரியவனின் பங்கை குறிப்பிட்டே ஆகவேண்டும் அவர் எழுதிய தீட்டு என்னும் கதை முதன்முதலில் வேலூரை கதைக்களமாகக் கொண்டு எழுதப்பட்டது. கொஞ்சம் விட்டிருந்தால் மும்பையின் பாலியல் தொழில் நடக்கும் இடத்தைப் போல மாறியிருக்க வாய்ப்பிருந்த சூரியகுளம் என்னும் பகுதியும் அங்கு வாழ்ந்த அடித்தட்டு மக்களின் வாழ்வும் அக்கதையில் பேசப்பட்டு அழகியபெரியவன் சிறந்த கலைஞனாக இலக்கிய உலகில் அறிமுகம் ஆனார். அதற்குப் பிறகு அழகியபெரியவன் எழுதிய அத்தனைக் கதைகளுமே வேலூர் மாவட்டத்தைக் குறிப்பாக அவர் வாழ்கின்ற பேர்ணாம்பட்டுப் பகுதியை அடிப்படையாக வைத்து எழுதப்பட்டன. தமிழ் இலக்கியத்தில் வேலூர் மாவட்ட இடங்களின் பெயர்கள் இடம் பெற்றதற்கு அழகியபெரியவன் மிக முக்கியமானவராக இருக்கின்றார். இந்த நேரத்தில் ஸ்ரீநேசனின் காலத்தின்முன் ஒரு செடி என்னும் கவிதைத் தொகுப்பும் இன்னும் சிலரின் ஆக்கங்களும் வெளிவருகின்றன. குலசேகரனின் ஆயிரம் காலங்களுக்குப் பிறகு என்னும் தொகுப்பும் இப்போது வெளிவந்துள்ளது.

இதற்கு அப்படியே அடுத்த இலக்கில் சுகிர்தராணி. அவருடைய கவிதைகள் உலகப்பெண்ணியத்தைப் பேசக் கூடியதாய் இருந்தன. சுகிர்தராணியின் கவிதைகள் இலக்கிய தளத்திலும் பெண்ணிய தளத்திலும் புதிய அதிர்வுகளையும் பெண்ணிய விடுதலையினையும் சாத்தியப்படுத்தின என்பது சரியானதுதான். சுகிர்தராணியின் கவிதைகள் அவருக்கு உலகப்புகழைப்பெற்று தந்திருக்கின்றன. அவருடைய மூன்று தொகுப்புகள் கைப்பற்றி என் கனவு கேள், இரவு மிருகம், அவளை மொழிப்பெயர்த்தல் என்பன. இதில் இரவுமிருகம் அய்ந்தாவது பதிப்பைக் கண்டிருக்கின்றது. யாழன் ஆதியின் இசையுதிர்காலம். செவிப்பறை, நெடுந்தீ, கஸ்பா ஆகிய தொகுப்புகளும் வெளிவந்திருந்தன.



இதற்கிடையில் அறிவொளி இயக்கத்தின் தாக்கத்தால் அதில் பணியாற்றியவர்கள் பண்பாட்டுரீதியாக கலைத்துறைகளில் பணியாற்றும் போது கிடைத்த அனுபவத்தை வைத்துக்கொண்டு முற்போக்கு எழுத்தாளர் சங்கம் அமைத்து இலக்கியப் பணிகள் ஆற்றினர். திருவண்ணாமலை கலை இரவின் தாக்கத்தில் இங்கும் பல கலை இரவுகள் நடத்தப்பட்டன. இதன் மூலமும் தீவிர இலக்கிய ஆளுமைகள் உருவாகவில்லை. மாறாக குரலிசைக் கலைஞர்கள், தப்பாட்டக் கலைஞர்கள், பெண்கலைஞர்கள் உருவாகினர். இது ஒரு குறிப்பிடத்தகுந்த மாற்றம் என்றே கூறலாம். மார்க்சியம் அவர்களின் மூலப்பொருளாகி இருந்தது. இதற்கு முதல் காரணமாக கவிஞர் முகில் அவர்களைக் குறிப்பிட்டுச் சொல்லலாம். அவரின் குரல் வளமும் மேடையை அவதானிக்கும் தன்மையும் பலரைக் கலைஞர்களாக மாற்றியது. கூச்சத்தை விட்டுவிட்டு பாடவும் ஆடவும் நடிக்கவும் முன்வந்தனர் மக்கள். முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் வேலூர் மாவட்ட கவிஞராக அறியப்பட்டு தொகுப்புகளைத் தந்தவர் முல்லைவாசன். இவர் குடியாத்தத்தைச் சார்ந்தவர்.

முப்பதுக்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ள நாகூர் ரூமியும் வேலூர் மாவட்டத்தில்தான் இருக்கின்றார். அவருடைய நூல்கள். மொழிபெயர்ப்புகள் தமிழிலக்கிய உலகத்திற்கு அதிக அறிமுகமானவை. குட்டியாப்பா என்ற அவரின் குறுநாவல் வேலூர் மாவட்ட களங்களைக் காட்சிப்படுத்தியுள்ளது. அவரின் பிறகதைகளும் அப்படியே.

ஆற்காடு வாலாஜா பகுதிகளில் இயங்கிக்கொண்டிருக்கும் கவிப்பித்தன் கவிதை நூலொன்றையும் சிறுகதை நூலொன்றையும் வெளியிட்டுள்ளார். சோலையார் பேட்டையில் வசிக்கும் சோலை இசைக்குயில் ஹைக்கூத் துறையில் பல நூல்களை எழுதிக் கொண்டிருக்கின்றார். இவர்கள் தவிர வேலூரில் ம.நாரயணன், இலக்குமிபதி போன்றோர்களின் நூல்கள் பெரிய அளவில் வெளி வந்திருக்கின்றன. பாரதிதாசனின் பரம்பரை என்று சொல்லக்கூடிய வகைமையில் இவர்களை நாம் அடையாளப்படுத்தலாம். உவமைக்கவிஞர் சுரதா போன்றோருடன் இவர்களுக்கு நல்ல தொடர்பும் உறவும் இருந்திருகின்றது. இப்படி ஓர் இலக்கிய வரைவியலை வேலூர் மாவட்டத்தில் நம்மால் உருவாக்க இயலும்.

எனினும் இப்போது ஏற்பாடு செய்யப்பட்டிருந்த புத்தகத்திருவிழா வேலூர் மாவட்ட மக்களுக்கு மட்டுமல்ல அங்கிருக்கும் ஆக்கவாளிகளுக்கும் ஒரு உத்வேகத்தையும் உணர்ச்சியையும் கொடுத்துள்ளது என்பது உண்மை. மாவட்ட நிர்வாகம் மேற்கொண்ட செயல்பாடுகளால் மிகக் குறைந்த காலத்தில் கடைகள் அமைக்கப்பட்டன. பெரும்பாலும் அனைத்துப் பள்ளிக்குழந்தைகளும் புத்தகக் கண்காட்சியைப் பார்வையிட்டனர். அவர்களுக்குப் பேருந்து வசதி செய்துகொடுக்கப்பட்டது. அதுமட்டுமல்லாமல் இலக்கிய நிகழ்ச்சிகளை அழகியபெரியவன் ஒருங்கிணைத்திருந்தார். தமிழகத்தின் முக்கிய ஆக்கவாளிகள் அனைவரும் அழைக்கப்பட்டிருந்தனர். மாவட்ட ஆக்கவாளிகளுக்கும் வாய்ப்புகள் வழங்கப்பட்டன. புத்தகத்திருவிழாவிற்கு அழகியபெரியவனின் பங்களிப்பு முதன்மையானதாக இருந்தது. ஆழி செந்தில்நாதன் இன்னொரு திசையில் இந்தப் புத்தகத் திருவிழா வெற்றியடைவதற்குக் காரணமாக இருந்தார். கடை வைத்திருப்பவர்களுக்கு வேண்டியவற்றைத் தருவது. அவர்களின் தேவைகளைச் சரியாகத் தீர்த்துவைப்பது. இலக்கிய அரங்குகளில் பங்கேற்பது என அந்த அமைப்பு முழுவதும் அவருடைய கட்டுப்பாட்டில்தான் இருந்தது.

இதற்கெல்லாம் எல்லாவகையிலும் உறுதுணையாக இருந்த மாவட்ட ஆட்சியர் செ. ராஜேந்திரன் அவர்களும் பாராட்டுக்குரியவர். அவருடைய அதிகாரிகளும் சிறந்த பணிகளை ஆற்றினார்கள்.

இந்த ஆண்டு தொடங்கப்பட்ட வேலூர் புத்தகத்திருவிழா நூலாறு என்னும் பெயரிலேயே இனிவரும் ஆண்டுகளிலும் தொடரவேண்டும் என்பதே அனைவரின் விருப்பம்.

Monday, August 23, 2010

வனமழை

வனத்தின் கனியாகி சிவந்த அவள் உதடுகளில்
சொற்கள் பிரசவமாகி விழுகையில்
மழைத்துளிகளாகின்றன
வனம் பசுமையடைகின்றது
உயிர் ஊறும் வேரில் வாசம் கிளர்ந்து
இறுகுகின்றது வனம்
அடர்த்தியுடன் புதராகி அவள் மேலும் சிரிக்கின்றாள்
வானம் சிவக்கின்றது
கருத்த மேகங்கள் மேலும் மழையைத்தர
கானாறு புறப்படுகின்றது
சருகுகள் நிறந்த கானின் மேனி இப்போது
இசைக்கருவியாகி மீட்டுகின்றது
அவளின் சொற்களை பாடல்களாய்
இப்போது காட்டில் குயில்கள் தோன்றுகின்றன
செவிகள் முளைத்த மரங்கள்
இன்னும் தழைக்கின்றன
மேகங்கள் மரங்களில் குடியேறுகின்றன
இப்போது வேரில் மாரி வர
வனம் மழையானது

Thursday, July 22, 2010

நீர் உரிமை

சந்திரபாபு நாயுடுவின் போராட்டம் ஒரு சிறந்த எடுத்துக்காட்டாக இருந்தும் தமிழர்கள் வெறுமனே வாளாதிருக்கின்றார்கள். சந்திரபாபு நாயுடு சமீபத்தில் மகாராட்டிர போலீசால் குண்டுகட்டாகத் தூக்கி வரப்பட்டு தனிவிமானத்தில் ஐதராபாத் விமானநிலையத்தில் தன் சகாக்களோடு வந்து கொட்டப்பட்டார். அவர் என்ன இந்தியாவை விட்டு வெளிநாட்டுக்கா சென்றார். அவருடைய அண்டை மாநிலமான மகாராட்டிராவுக்குத்தான் சென்றார். ஒரு சுற்றுலாப் பயணியாக ஜாலியாக ஒரு டூர் அடித்தால் பரவாயில்லை. ஆனால் மகாராட்டிர மாநிலத்தில் நாண்டெட் மாவட்டத்தில் பாப்லி என்னும் இடத்தில் கோதாவரி ஆற்றின் குறுக்கே கட்டப்படும் அணைக்கட்டை தடுக்க வேண்டி அதைப் பார்க்க போயிருக்கின்றார். மகாராட்டிர அரசு இதற்கு தடை விதித்திருக்கின்றது. அதை மீறிதான் அந்தப்போராட்டத்தை மாவீரர் சந்திரபாபு நடத்தியிருக்கின்றார். ஒரே ஒரு காரணம் தான் ஆந்திராவுக்கு வரும் தண்ணீரை அந்த அணை தடுக்கின்றது என்பதுதான் அது. நியாயம் தானே இந்தப் போராட்டம். ஆந்திராவின் முன்னாள் முதல்வர் பிற மாநிலத்தில் அத்துமீறி நுழையலாமா?

ஆற்றங்கரையில் வாழக்கூடியவர்களின் உரிமை அது. அவர்களுக்கான நீர் உரிமை. அதை அப்படியே தமிழ்நாட்டுக்குப் பொருத்துங்கள் பார்க்கலாம். கர்நாடகாவிலிருந்து வரும் காவிரி தமிழர்களுக்கு வாய்க்காமலே போய்விட்டது. மிகை நீராக வரும் ஒகேனக்கல் நீரை தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்ட மக்களுக்குத்தரலாம் என்றால் கர்நாடகக் காரர்கள் தமிழ்நாட்டில் நுழைக்கின்றார்கள். பாலாறும் அங்கிருந்துதான் தொடங்குகின்றது. தமிழ்நாட்டிற்குள் வருவதற்கு முன்பு ஆந்திராவின் வழியாகத்தான் வருகின்றது. ஆந்திராவில் அது 30 கிமீ தூரத்திற்குத்தான் பாய்கின்றது.

ஆனால் இந்தக் கூத்தை பாருங்கள். 30கிமீ நீளத்திற்கு 32 தடுப்பணைகள் கட்டப்பட்டு ஒரு சொட்டு தண்ணீர்கூட தமிழகத்திற்கு வருவதில்லை. இப்போது கணேஷ்புரம் என்னும் இடத்தில் ஒரு அணை கட்டப்பட்டு வருகின்றது. இதெல்லாம் யாரால் தெரியுமா? மாவீரர் சந்திரபாபு ஆட்சியால்தான். அதுவும் அவரின் சொந்த தொகுதியான குப்பம் தொகுதியில்தான். சரியா என்று கேட்டால் ‘என் தொகுதி மக்கள் நலந்தான் எனக்கு முக்கியம்’ என்று கூறினார் சந்திரபாபு. ஆனால் இப்போது அவர் போராடுகின்ற அணை மகாராட்டிர மாநில முதல் அமைச்சரின் தொகுதியில்தான் இடம்பெற்றிருக்கின்றது.

கீழ்ப்பாலாறு பகுதியில் இருக்கும் வேலூர் மாவட்டம், காஞ்சிபுரம் மாவட்டம் ஆகிய மாவட்டங்கள் வறண்டுகொண்டிருக்கின்றன. அதற்குக் காரணம் சந்திரபாபு கட்டிய தடுப்பணைகள்.

இதயெல்லாம் கேட்க தமிழகத்தலைவர்கள் போவார்களா? தமிழீழப் பிரச்சினையே இவர்களிடம் படாதபாடு பட்டது. தம்ழிநாட்டு ஓட்டாளிகளின் பிரச்சினையிக் கூட அவர்களால் தங்கள் சுயநலத்திற்காகத்தான் பார்ப்பார்கள்.
தமிழன் என்றால் என்ன அடிமை என்றுதானே அர்த்தம்.

Sunday, June 27, 2010

செம்மொழி மாநாடு - தொலைக்காட்சியில் பார்த்தவை


மாநாட்டிற்கு செல்ல வேண்டும் என்னும் உந்துதல் ஒருபக்கம் மனதில் ஓடிக்கொண்டேயிருந்தது. ஊரில் பார்த்த நண்பர்கள் எல்லாம் என்ன இன்னும் போகவில்லையா என்றே கேட்டுக்கொண்டிருந்தனர். ஒரு நண்பன் இரவு ஒரு மணிக்கு தொலைபேசியில் கூப்பிட்டு மாநாட்டிற்குப் போவதாகவும் பேருந்து நிலையத்தில் இருப்பதாகவும் வருகிறாயா என்று கேட்டான். கோபம் வந்தது. ஆனாலும் அவனைப் போய் வா என்றனுப்பிவிட்டு காலையிலிருந்து தொலைக்காட்சி முன்னால் உட்கார்ந்து பார்க்க ஆரம்பித்தேன்.

தொடக்க விழாவினையும் நான் தொலைக்காட்சியில் பார்த்தேன். தொடக்க விழா நம்பிக்கைகளை விதைத்தது. தமிழ் இணைய மாநாடு மிகவும் முக்கியமானதாகப் பட்டது.தமிழ் எழுத்துருக்கள், புதிய தமிழ் விசைப்பலகை, தமிழில் இயக்கப்படும் கணிணி. என்றும் இன்னும் தொழில்நுட்பங்களைப் பற்றியும் பெரிதாகப் பேசப்போகிறார்கள் என்றதும் மகிழ்ச்சித் தொத்திக் கொண்டது.

இன்னுமொரு முக்கிய காரணம் நீச மொழி என்று அவாள்களால் சொல்லப்பட்ட தமிழை செம்மொழியாக்கி அதை உலகுக்கு உணர்த்துவதும் தேவபாசை என்று சொல்லப்பட்ட சமஸ்கிருதத்திற்கு எந்தவகையிலும் தமிழ் குறைந்தது அல்ல என்று நிரூபிப்பதற்கும் இம்மாநாடு மிகவும் தேவைப்பட்டது. அது நிறைவேறியும் இருக்கின்றது. ஆறாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட சிந்து சமவெளி நாகரீகம் என்பது தமிழர்களுக்கானது என்னும் ஆய்வும் அதுதரும் விளக்கமும் இந்திய நாடு முழுதும் தமிழினம் வாழ்ந்த நிலப்பரப்பு என்பதும் தமிழர்கள் அடிமையாக்கப்பட்டு தண்ணீருக்கு அல்லாடும் சூழல் அப்பட்டமாக பொதுநிலைத்தமிழருக்குப் புரியும் நேரமாக இந்த மாநாடு இருக்கும் என்பதும் எண்ணம். கன்னட ரணதிவே என்னும் அமைப்பு மாநாடு நடக்கும் போதே ஒகேனக்கல் கூட்டுக்குடிநீர் திட்டத்தை எதிர்த்து நடத்திய போராட்டம் தமிழர்கள் இந்தியரில் அடக்கம் இல்லை என்பதனை வெளிப்படையாக உணர்த்தியது.

முள்ளிவாய்க்காலில் கொல்லப்பட்ட தமிழினத்தின் பூர்வ வரலாறு என்பது இலங்கையை ஒட்டுமொத்தமாக தமிழ் மன்னன் ராவணன் ஆண்டான் என்னும் ராமாயணத்தினை, அதனை நம்பவில்லை என்றாலும் முன்வைத்து திருமாவளவன் பேசிய பேச்சு ஆட்சியாளர்களுக்கும் பொதுநிலையில் இருக்கும் தமிழர்களுக்கும் புரியவைக்கும் தன்மையுடையதாக இருந்தது. எல்லாரும் பேராசிரியர் கா.சிவத்தம்பியை இலங்கை தமிழ் அறிஞர் என்று விளித்துக் கூறியபோது தமிழக முதல்வர் மட்டும் ஈழத்தமிழறிஞர் என்று அழைத்தார். இது மனோவியல் ரீதியாக ஆய வேண்டிய ஓர் சொல்லாடல். அது இருக்கட்டும்

இன்னொரு அரங்கில் உரையாற்றிய அக்கா அரங்க மல்லிகா அவர்களின் உரை மிகவும் கருதத்தக்கது. கொடுக்கப்பட்ட நேரத்தையெல்லாம் மிகச் சரியாகப் பயன்படுத்திக்கொண்டு தலித்தியத்தையும் பெண்ணியத்தையும் சரியான நேரத்தில் உள்நுழைத்த பெருமை அவர்களைச் சாரும் அதற்காக அக்கா அவர்களைப் பாராட்ட வேண்டும்.

மாநாட்டில் ஆய்வுக்கட்டுரைகள் வாசிக்கப்பட்டு விவாதிக்கப்பட்ட அரங்கங்களை செய்தியாகக்கூட காட்டவில்லை. அதெல்லாம் பொதுமக்களுக்கு தேவையில்லை என்று தமிழ் சினிமா இயக்குநரைப் போல விட்டு விட்டார்களா தெரிய வில்லை. அவற்றைக் காட்டியிருந்தால் மாநாட்டின் பயனும் பொருளும் எப்படி இருந்தது என்று சொல்லியிருக்க முடியும்

ஆனால் காட்டப்பட்டதோ வேறாக இருந்தது. முதல் நாள் நடந்த கவியரங்கம் படு கேவலம். செம்மொழி மாநாட்டின் கவியரங்கம் லோக்கல் கவியரங்கத்தினை விட மிக மோசமாக இருந்தது என்றே சொல்லிவிடலாம். கவியரங்கம் என்னும் அமைப்பே செத்துபோன ஒன்றாகத்தான் இப்போது இருக்கின்றது. அதை மேலும் சாகடிக்க நம்முடைய கவிஞர்கள் எடுத்த முயற்சி வீண்போகவில்லை. கருணாநிதி என்னும் கவிஞர்(?) பாடிய பிராந்தி பாட்டில் பிரதிபா பாட்டில் என்னும் ஒப்புமைகள் கருத்துரீதியாகவும் அவருக்கு ஏதும் தெரியவில்லை என்பதை நமக்குப் புரிந்து கொள்ள உதவியது. நுணலும் தன் வாயால் கெடும். அத்தகைய நுணலுக்கு எதற்கு இப்படி ஒரு வாய்ப்பு. விவேகாவின் கவிதை கவிதையா அது. இவர்கள் எல்லாம் எதையும் வாசிக்கவும் மாட்டார்கள் வெட்கப்படவும் மாட்டார்கள் போல.சினிமாவில் பாட்டெழுதுபவர்கள் எல்லாம் கவிஞர்களாக நினைப்பது தவறு(யுகபாரதி போன்றோர்களைத் தவிர்க்கலாம்)
முத்துக்குமார் நம்பிக்கையோடு பார்க்கப்பட்டார். ஆனால் அவரும் வேகவேகமாக எதையோ சொல்லிவிட்டார்.தமிழச்சியின் கவிதைதான் என்னளவில் வரலாற்றின் பின்புலத்தோடு இருந்தது என்பேன்.அதனால் வாலியின் தலைமையிலான கவியரங்கத்தை நான் பார்க்கவில்லை.

மாலையில் நடந்த கருத்தரங்கம் ஒரு கூத்து. லியாகத் அலிகான் என்னும் முன்னாள் அதிமுககாரர் கருத்தரங்கில் பேசுகின்றேன் என்று முதல்வரை புகழ ஆரம்பிக்க ஒலிவாங்கியை வாங்கி கருணாநிதியே அதை நிறுத்தும்படி ஆகிவிட்டது.அதற்குப்பிறகு வந்தவர்களும் அப்படித்தான் பேசினார்கள். திருமாவளவன் மொழிக்குறித்த ஆய்வினை அம்பேத்கர் கூற்றை வைத்து பேசினார்.அதுதான் கருத்தரங்கின் முக்கியமான பேச்சாக இருந்தது. து.ராஜா அவர்களின் பேச்சும் கருத்தும் மத்திய மாநில அரசுகளுக்கு கோரிக்கைகளாக இருந்தது. சீதாராம் யெச்சூரியின் பேச்சு இந்திய தேசியத்தை வலியுறுத்துவதாகவே இருந்தது.மொழி என்பது சிந்தனையைப் பிரதிபலிக்கும் கருவி. என்கிறார். தமிழ் அப்படிப்பட்டதா என்பது கேள்விக்குரியது.

மறுநாள் பட்டிமன்றம் பாரதிராஜா பங்கேற்பாளர். அய்யோ எந்தக்கருத்தையும் கலைஞரை மட்டும் வைத்துக்கொண்டு சொல்லிவிடலாம் என்று வந்திருந்தார் பாரதிராஜா. கையில் திரைக்கதையே இல்லாமல் படப்பிடிப்பிற்கு போவது என்பது சாதாரணமாக இருக்கலாம்.ஆனால் பேசுவது அப்படியல்லவே. எஸ்.வி. சேகர் இன்னும் மோசம். இதெல்லாம் கவனிக்கப்பட்டிருக்கும் என்றால் நன்றாக இருந்திருக்கும்.

யாழன் ஆதி

Tuesday, June 22, 2010

நெட்டைப் புல்லென காலை
பசுமையாய் மலர்ந்திருக்கிறதுகுருவிகள்
இன்னும் கூடுகளிலிருந்து வரவில்லை
சொற்கள் காலை பூமியின் மிருதுத்தன்மையை
அடைந்திருந்தன
செந்நாவுகளில் குறைந்தது ஒரு வட்டம்
இனிப்பாவது இருந்திருக்கின்றது
பகல் வரும் நேரம்
தயாராகின்றன தாவரங்கள்
அவ்வப்போது அவசரப்பட்டு அழுகின்றது
குழந்தை

உண்மை

காற்று மாசு படிந்துவிட்டது
நீர் அமிலமாகிவிட்டது
மண் பாழாகிவிட்டது
இந்தியா வல்லரசாகிவிட்டது
மனிதர்கள் செத்துவிட்டார்கள்

ந.க. விஜயராஜன்

Saturday, June 5, 2010

சொல்ல முடியாதது

துயிலும் ஓர் இரவின் கூட்டில் என்னைப் பொருத்த
அதன் அடுக்குகளில் பயணமானேன்
தெளிவின் ஒளியின்மை என்னை நடத்துகின்றது
மரங்களின் பறவைகள் காய்களாகி இருந்தன
காற்றும் வீசுதலின்றி உறக்கம் பூசுகின்றது
பூக்கள் பற்றி எதையும் அறிய வாய்ப்பில்லை
பாதைகள் இரவு விளக்கினைத் தொலைத்த நேரமது
கற்கள் கண்விழித்துக் கொண்டிருந்தன
எதையும் நோக்கும் நேரமின்மையின் அவசத்தில்
நிலா நில்லாமல் இருந்தது
பகலுறங்கும் புதருக்கடியில் பாம்புகள் உறவாடின
நடத்தல் சாத்தியம்ற்றுப் பின் கனவின் பயணம்
சொல்லவியலாத வார்த்தைகளாலானது அது.

Sunday, May 9, 2010

படைப்புமீது நடத்தப்படும் வன்முறை

இலக்கியப் பிரதிகளை உருவாக்குபவர்கள் கடவுள்கள் அல்ல தவறுகளைச் செய்வதற்கும் அவற்றுக்கான காரணங்களை அடுக்குவதற்கும். தமிழிலக்கியப் பிரதிகளை கவனத்தில் கொள்வோமெனில் இன்னும் மானுடம் மனம் திறந்து பேசக்கூடிய எத்தனையோ செய்திகள அப்படியே இருக்கின்றன.

தலித் பிரச்சினைகளை பிரதிகளாக்கிய காலங்களிலும் அது தீவிர உச்சகட்டத்தை அடைந்த நேரத்திலும் தற்போது அது தேவையற்றதென கருதப் படும் காலத்திலும் இன்னும் காத்திரமாக பேசப்பட வேண்டியவை அப்படியேதான் இருக்கின்றன. கதைகளாக்கப் பட வேண்டிய தலித் வாழ்வுகளும் அதன் எதிர்பாராத தீவிரமும் இன்னும் அப்படியேதான் இருக்கின்றன. அதைவிட இன்னும் முக்கியமானது என்னவென்றால் தலித் எழுத்தாளர்களே அதன் தீவிரம் தற்போது தேவையற்றது என்று கூறும் சூழல்தான்.

இதே அளவுகோலை வைத்துக்கொண்டுதான் பெண் ஆக்கவாளிகளையும் நோக்க வேண்டியுள்ளது. புதிராக இருக்கின்றாள் பெண் என்னும் அங்கலாயிப்பில் புரியவில்லை பெண் என்று சொல்லி அவர்களைப் பூடகமாக வைத்திருந்த சமூக கோட்பாட்டு அரண்களை யெல்லாம் உடைத்து தன்னை பிரகடனப்படுத்தியது பெண்மொழி எழுத்து.

அது அப்படி தன்னை உடைத்துக் கொண்டு வெளிவந்தபோது எல்லாமே தகர்ந்துபோயின. எந்தெந்த உறுப்புகளை மையமாக வைத்து ஆண் ஆக்கங்கள் பெண்ணைப் பார்த்தனவோ அவை திறக்கப்பட்ட பாசறையிலிருந்து எடுக்கப்பட்ட ஆயுதங்களாக மாறின. அவை காற்றின் எல்லா திசைகளிலும் கல்ந்து பெரும் வீச்சுடன் நெருங்கின. அதிர்ந்த ஆண் ஆக்கங்கள் அவற்றை எதிர்த்தன. கூக்குரல்கள் எழுப்பின. ஆனால் அவற்றையெல்லாம் மீறி பெண்மொழி காலமாக மாறிவிட்டது. அதனை காலத்திலிருந்து யாரும் பிரிக்கமுடியாது.

ஆனால் லீனா மணிமேகலை என்னும் கவிஞரின் கவிதைகள் ஆபாசமாக இருக்கின்றன என்று இந்துத்துவ இயக்கங்கள் காவல் துறையிடம் புகார் கொடுத்திருக்கின்றது என்று ஒரு செய்தி அடிபடுகிறது. அது உண்மையாக இருக்கும் என்றும் சொல்லப்படுகிறது. அப்படி உண்மையாக இருக்கும் பாட்சத்தில் அதில் என்னவிதமான நியாயம் இருக்கின்றது என்று தெரியவில்லை. அதுவும் அது குறித்து கேள்விகள் கேட்கும் தாத்பரியங்கள் எதுவும் இந்துத்துவ அமைப்புகளுக்கு இல்லை.

இந்துக் கோவில்களில் உள்ள ஆபாசமான சிலைகள். இந்துக்கடவுளர்களின் ஆபாச புராணங்கள் இதெல்லாம் எப்படி நியாயப்படுத்தப்படுபவனாக இருக்கக் கூடும்.
எழுத்து என்பது அவருடைய உரிமை. அவரின் துன்பங்களை அவஸ்தைகளை எழுச்சியை எழுதுவதற்கு அவருக்கு உரிமை உண்டு. அப்படி இருக்கும்போது அது ஆபாசம் ஆபாசமில்லை நியாயத்தீர்ப்பு வழங்க யாருக்கும் உரிமை இல்லை.
எழுத்துதான் சமூகத்தை மாற்றி இருக்கின்றது. அதனால்தான் இந்துத்துவ இயக்கங்கள் இதை தூக்கிப் பிடிக்கின்றன. தீட்டு என ஒதுக்கி வைத்தவைகள் எல்லாம் பாடுபொருளாக மாறிவிட்டன. தடைகளைத் தகர்க்கின்றன. சமூகத்தினை கட்டுடைக்கின்றன. அதனால் தாங்கல் அமைத்துவைத்துள்ள சாதிய அடுக்குகள் சரிந்துவிடுகின்றன அதனால் தங்களின் வியாபாரம் நடக்கவில்லை என்பதுதான் அவர்களைன் இந்த எரிச்சலுக்குக் காரணம். கவலைப் படாதீர்கள் மதவாதிகளே நீங்கள் நினைக்கின்ற எதுவும் இங்கு நடக்காது. தீட்டு என்று நீங்கள் ஒதுக்கிவைத்தவர்கள் எல்லாம் எழுத்தை ஆயுதமாகத் தூக்கிவருகிறார்கள். உருட்டப்பட்ட உத்ராட்சைகளில் உலகை ஆளாலாம் என்ற கனவினை விட்டுவிடுங்கள் தீட்டுத்துணியென நீங்கள் சொன்ன அதுதான் புத்தகங்களாகவும் விடுதலைக்கான கருவியாகவும் பயன்பட வருகின்றன. ஒட்டுமொத்த விடுதலைக்காக பீ வாரிய கரண்டியும் கூடையும் செருப்புத்தைத்த ஊசிகளும் பேனாக்களாகிப் பேசுகின்றன. சேரிகள் பாசறைகளாகின்றன. பாடங்கள் ஊட்டப்படும்
Posted by பறை at 5:37 AM 3 comments Links to this post
Wednesday, March 10, 2010

அப்படி இன்னும் தெரியவில்லை யாருக்கும்
கடந்தவைகளின்மீதும்
நிகழ்பவைகளின்மீதும்
வினையாற்றும் விவரம்
கருமையின் இருப்பாயிருக்கும்
காலமேகம் பொழியும் மழையின் துயரம்
வேர்களை வேட்டையாடும் பொழுது எதுவாயினும்
அதில் நிகழும் மாற்றத்தின் குடியமர்ந்து
வாழும் குயிலின் பாடலைப் போல
அமைந்திருக்கும் வாழ்வு
Posted by பறை at 5:59 PM 0 comments Links to this post
Tuesday, March 2, 2010
தலித் பெண்ணெழுத்து: அடைய வேண்டிய பொன் இடம்


(விளாத்திகுளத்திலிருந்து வெளிவரும் கரிசல்கதிர் என்னும் இதழில் வெளியானது)

தமிழ் இலக்கிய வரைவினில் இன்றைக்கு பெண் எழுத்து முக்கியமான இடத்தை அடைந்திருக்கின்றது.சங்க இலக்கியத்திலேயே தமிழில் பெண் ஆக்கவாளிகள் மிகவும் சிறப்பாகவும் தங்களைன் எண்ணங்களை எந்தவிதமான தயக்கமுமின்றி கூறும் தன்மையுடன் இருந்திருக்கின்றனர். வெண்ணிக்குயத்தியார் என்னும் பெண்பால் புலவர் தன் காதலனைக்குறித்து பாடுவதும் அவனைத்தேடி செல்லுதலும் தமிழரின் வாழ்வுக்கு எடுத்துக்காட்டாய் அமைகின்றன. பௌத்த சமண சமயங்களின் பரவலால் வேறுபாடுகளற்றதாய் தமிழ்ச்சமூகம் இருந்தது. அதனால்தான் தற்கொல்லியை முற்கொன்ற குண்டலகேசி கதைகள் எழுதப்பட்டன.சமய இலக்கியக் காலங்களில் ஆண்டாளின் கவிதைகள் அவருடைய கடவுள்சார்ந்த கருத்துக்களை விட்டுவிட்டு பார்க்கின்றபோது அற்புதமான கவிதைகள். கவிதைக்கான தொழில்நுட்பத்துடன் இயங்கக் கூடியன அவை.

அதற்குப்பிறகு தமிழிலக்கிய வெளியில் பெண் எழுத்துக்கான தேக்கம் மிக நீண்டகாலமாகவே இருந்தது என்பது மறுக்கவொண்ணாதது.எங்காவது ஒருவர் எப்போதாவது ஒருவர் எழுதியிருப்பார். ஆனால் அவருடைய ஆக்கங்கள் அத்தனையளவு பேசப்பட்டிருக்குமா என்றால் இல்லை. காதலா கடமையா என்னும் நாவலை எழுதிய சித்தி ஜுனைதா பேகம் இபோதுதான் வெளியே தெரிய ஆரம்பித்திருக்கின்றார். இந்தக் காலக்கட்டத்தில் கவிதையில் பெண் நிலை என்பது மிகவும் மோசமாகவே இருந்தது. பத்தொன்பதாம் நூற்றாண்டில் தமிழ்க்கவிதை இரு நதிகளாய் கிளைவிட்டு நகர்ந்தபோதும் எந்த நதியிலும் பெண்ணெழுத்துக்கான தடம் பதியப்படவில்லை. வானம்பாடிகளானாலும் நவீன கவிதைகளை உருவாக்கியவர்களானாலும் பெண்களை முன்னிலைப்படுத்தவில்லை. அவரவர் ஆக்கங்களில் வேண்டுமானாலும் பெண்கள் குறித்த சித்திரங்களை எழுதினார்களே ஒழிய பெண் எழுதும் தளம் என்பது உருவாகவில்லை.

அதற்குப் பல காரணங்களை நம்மால் பட்டியல் போடமுடியும்.பெண்கல்வி என்பது மிகவும்குறைவாக இருந்தது. விடுதலை அடைந்த ஆண்டில் ஆயிரம் பெண்களில் ஆறு பெண்கள்தான் படித்திருந்தார்கள் என்றெல்லாம் புறக்காரணிகளை அடுக்கலாம். ஆனால் அவற்றையெல்லாம்விட மிக முக்கியமானது எழுத்து ஆதிக்கக் காரர்களிடமிருந்தது. அது அவர்கள் வீட்டுப்பரணில் பதுங்கியிருக்கும் பூனையைப்போலத் தான் பதுங்கியிருந்தது. இந்திய ஆதிக்கம் என்பது இந்து ஆதிக்கம் தானே. தமிழர்களும் இடைக்காலத்தில் பௌத்த வீழ்ச்சிக்குப் பிறகு காவிமயமாதல் நிகழ்ந்து தமிழகமும் தன்னிலை மறந்த சுடுகாடாக இந்துத்துவ சிந்தனை வெளியில் இருந்தது

அந்தக்காலக்கட்டங்களி தோன்றிய எழுத்து வகைகள் ஆதிக்கவெறி பிடித்தவர்களின் வாழ்வையும் அவர்களின் மொழியும்தான் பதிவாகின.இந்த நிலையில் பொதுவரங்கில் எழுதவந்த பெண்கள் தமிழ்ச்சூழலில் கதைகள் எழுதினார்கள். அதில் அவர்கள் பெண்களை விடுதலைக்கானவர்களாகக் கருதாமல் அவர்களை மற்ற ஆண் எழுத்தாளர்கள் எழுதுவதைபோலவே எழுதினார்கள் என்பதும் கண்கூடு.


தொன்னூறுகளில் தலித் எழுத்து தமிழில் தீவிரமடைகிறபோதுதான் பெண்ணெழுத்தும் தீவிரமடைகின்றது. எப்படி அரசியல்தளத்திலு சமூகத்தளத்திலும் தலித் விடுதலையும் பெண்விடுதலையும் ஒருசேரப் பார்க்கப்படுகின்றதோ அதைப் போலத்தான் இலக்கியத்திலும் பார்க்கப்பட வேண்டும். ஆதிக்கப் புலத்திருந்து கல்வியும் வாசிப்பும் பெண்களுக்கும் தலித்துகளுக்கும் கிடைத்தபோதுதான் அவர்கள் அவர்களுக்கான எழுத்தினை உருவாக்கினார்கள். அந்த எழுத்தின் காத்திரமும் அதன் தேவையும் இன்று சமூகத்தளத்தின் போதாமைகளை எடுத்துப் பேசுகின்றன. தலித் எழுத்தாளர்கள் தொட்ட பிரச்சினைகள் வாழ்வியல் விழுமியங்களாக இருந்து பின்னால் அவை அரசியல் முழக்கங்களாக மாறி அரசின் திட்டங்களாக அவை உருவாகின்றன. இத்தகைய குறைந்தபட்ச சமூக மாற்றத்தையாவது இவ்வகையான எழுத்துக்கள் கொணர்ந்திருக்கின்றன.

இச்சூழலில் பெண்ணெழுத்தின் இன்றைய நிலை யாது என்னும் கேள்வி எழுகிறது. மனுவின் கூற்றுப்படி பெண் பார்ப்பனக் குலத்தில் பிறந்திருந்தாலும் சூத்திரருக்குரிய ஒடுக்குதலுக்கு உள்ளாகிறவளாக இருக்கிறாள். அதனால் பொதுப் பெண்ணியம் எனபதும் அதைச் சார்ந்து இயங்கக் கூடிய இலக்கியத்தளம் மட்டுமே போதும் என்பதையும் தாண்டி தலித் பெண்ணியம் பேசப்படுகிறது. பொதுவான பெண்ணிலக்கியம் தலித் பெண்ணின் விடுதலையைச் சாத்தியப்படுத்துகிறதா? பல பொதுப் பெண்ணிய எழுத்தாளர்கள் மேல்தட்டு மனோபாவதோடு மட்டுமே இயங்குகிறார்கள் என்பதும் கண்கூடு.

தலித் பெண்ணெழுத்து என்பது பொதுப்பெண்ணியத்திலிருந்து எந்தப் புள்ளியில் வேறுபடுகிறது எப்படி அதன் இயக்கம் இருக்கும் என்பது குறித்த பிரக்ஞை ஏதுமற்று சாதி ஒடுக்குமுறைகளையும் அதனால் ஏற்பட்டு துயரவெளிகளையும் ஆக்கங்களாக மாற்றிவிடுவது மட்டுமே ஆகாது. மாறாக பெண் அடக்குமுறைக்கு உள்ளான காலத்தின் சூழ்ச்சிக்குறித்தும் அதன் கூரிய அம்பாகவும் ஆயுதமாகவும் இருக்கின்ற மதம் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தாமல் தலித் பெண்ணெழுத்தும் சாத்தியமற்றுதான் போய்விடும்.

தலித் எழுத்துக்கான தேவை நிறைவடைந்துவிட்டதாகவும் அது தேங்கிவிட்டதாகவும் கூறுபவர்கள் தலித்திய சிந்தனையின் ஆழத்திலிருந்து புறப்படாதவர்கள். அதேபோல்தான் தலித் பெண்ணெழுத்தும். பெண்ணிய எல்லாவாத அடிமைத்தனத்திற்கும் காரணமாய் இருப்பது ஒன்றுதான் அதுதான் இந்து மதம். தீட்டு என்னும் சொல்லைப் பயன்படுத்தி தன் குடும்பத்தில் உள்ள பெண்களையே வீட்டிற்கு வெளியே வைத்ததுதான் இந்து ஆதிக்க மரபு.இதையே சமூகத்திற்குப் பொருத்தினால் சேரி. உழைக்கின்ற பெண்களை அவர்களின் உழைப்பைச் சுரண்டி அவர்களின் உடல் உபாதைகளைப் பற்றிய அக்கறை ஏதுமின்றி புறந்தள்ளிஅவர்களின் வாழ்வாதாரத்திற்குத் தேவையான எல்லாவற்றையும் மறுத்து ஆணை குடும்பத்தை சார்ந்து வாழ்வதுதான் அவர்களுக்கு விதிக்கப்பட்டது என்று சொல்லி பெண் என்னும் உயிரை ஒரு பொருளாகக் கூட மதிக்காததுதான் இந்துத்துவம்.

தலித்துகளும் பெண்களும் இந்துத்துவ ஆதிக்கத்தினால் சமூகத்தின் விளிம்பு நிலைக்குத் துரத்தப்பட்டவர்கள் என்றாகின்றனர். சமூகம் இந்த இந்துத்தத்துவத்தினால் ஜனநாயகமற்றதாய் மாறிவிட்டது. இதைக் கருத்துருவாகக்கொண்டு இந்துமத வெளியேற்றமே சமூக விடுதலை என்றாய்ந்து அதை நிலைநிறுத்த நாக்பூரில் அய்ந்து லட்சம் மக்களோடு புத்த மதத்திற்கு மாறினார் புரட்சியாளர் அம்பேத்கர். இந்துவாகப் பிறந்தேன் அது ஒரு விபத்து; ஆனால் கண்டிப்பாக இந்துவாகச் சாக மாட்டேன் என்று சொல்லி ஏறக்குறைய முப்பது ஆண்டுகால தீவிர தேடலுக்குப் பிறகு பவுத்தம்தான் மானுட விடுதலைக்கு சரியான வழி என்று பிரகடனம் செய்து அதை நிறைவேற்றினார் புரட்சியாளர்.

இந்தப் புள்ளியிலிருந்துதான் பெண்ணெழுத்தைப் பார்க்க வேண்டியுள்ளது. இந்துத்துவம்தான் பெண்ணை மனிதப் பிறப்பிலிருந்து கழித்து வைத்தது. பெண்களை இனப்பெருக்கம் செய்வதற்கும் வயல்வெளிகளில் மாடுகளைப் பயன்படுத்துவதைப்போல வீட்டில் வேலைகளை குறிப்பாக ஆணுக்கான வேலைகளைச் செய்வதற்கும் நிர்பந்தப்படுத்தியது. அவர்களின் உடலைவைத்தே அவர்களைப் புறந்தள்ளியோ அல்லது வன்புணர்வு செய்தோ அல்லது அதைக் கொண்டாடி தன்னின்பத்திற்குப் பயன்படுத்திக்கொண்டது. அந்த உடலைப் பயன்படுத்திதான் இன்றைய நவீன பெண்கவிஞர்கள் ஆண் சமூகத்திற்கு எதிராக எழுத ஆரம்பித்தார்கள்

மயிர்கள் சிரைக்கப்படாத என் நிர்வாணம்
அழிக்கப்படாத காடுகளைப்போல்
கம்பீரம் வீசுகிறது

என்று சுகிர்தராணியால் எழுதமுடிகிறது என்றால் அதை பாலியல் கவிதை என்று சொல்லிவிட முடியாது. மறுக்கப்பட்ட யோனிகளையும் முலைகளையும் பதாகைகளாக உயர்த்துவது என்னும் கருத்தியலின் மூலம் அது. ஆனால் இத்தகைய கவிதைகளை ஆண் அறிஞர்கள் பாலியல் கவிதைகள் என்று வகைமைப்படுத்துகிறார்கள். இத்தகைய கவிதைகள் பாலியல் கவிதைகள் அல்ல அவற்றை பெண்மொழிக் கவிதைகள் என்றும் கூட நாம் அழைக்கலாம். ஆணியத்திற்கு எதிராக இந்தக் கவிதைகள் மாறியிருக்கின்றன. அதுவும் நல்லதுதான். ஆனால் வெறுமனே ஆணியம் அல்லது லிங்கமைய வாதம் என்பது பொதுப் பெண்ணியம். அதில் தலித் பெண்ணியத்திற்கான நுண்ணரசியலைக் கட்டக்கூடிய இடம் இல்லாமலே இருக்கின்றது. சமூக அரசியலில் சமத்தன்மை வருவதற்குப் புரட்சியாளர் அம்பேதகர் சொன்ன இந்துக்களிடமிருந்து விடுதலை என்னும் தத்துவத்தைத்தான் நாம் இங்கே பொருத்த வேண்டும். ஆணியம் என்பது இந்துத்துவத்தின் ஓர் ஏற்பாடு.

ஆக, பெண்ணெழுத்து எதை மோதி உடைக்க வேண்டும் என்றால் இந்துத்துவத்தை. அதன் கூறாக இருக்கின்ற இந்துமதத்தை. அதன் முகமூடியாக இருக்கின்ற இந்துத்துவ பயங்கரவாத அரசியலை. அதன் இயங்குதளமாக இருக்கின்ற இந்துப் பண்பாட்டு முதல்வாதத்தை. என்ன நடக்கிறது உண்மையிலே என்று பார்த்தால் பொதுவான பெண் ஆக்கவாளிகள் யாரும் தங்களுடைய இந்து அடையாளத்தை துறந்தாரில்லை. அகில இந்திய அளவில் அரசியலில் இந்து அரசியலுக்கு எதிராகப் பார்க்கப்படுகின்ற பிருந்தா காரத் கூட இந்து அடையாளமாகிய பெரிய பொட்டோடுதான் காட்சி தருகிறார்கள். இந்துத்துவம் சொன்ன பெண் அடையாளங்கள் அனைத்தும் பெண் ஆக்கவாளிகளிடத்தில் இருக்கின்றன. புற அடையாளங்களான உடைகளில் மாற்றங்கள் இருக்கின்றன. இது இப்போது எந்தவிதமான சமூக அக்கறையுமின்றி குடும்ப அடிமைகளாக இருக்கின்ற பெண்கள்கூட அழகியலை முன்னிருத்தி இத்தகைய புற அடையாள மாற்றங்களோடுதான் இருக்கின்றார்கள்.

சமூக முன்னனியினராக இருக்கக்கூடிய பெண் ஆக்கவாளிகள் எந்நிலையிலிருந்து தங்கள் முன்னெடுப்பைத் தொடுப்பது என்பதுதான் நம் வினா. தலித் அரசியல் நிலையில்தான் அதனை முன்னெடுக்கவேண்டும். அரசியலில் எத்தனையோ உயர்பதவிகளில் தலித்துகள் இருக்கின்றார்கள். பெரும்பணக்காரர்களாகவும் இருக்கின்றனர் ஆனால் அவர்களின் மீதான சாதி இழிவு போய்விட்டதா என்றால் இல்லை எல்லாரும் ’அவங்கதான்’ என்றுதான் இன்றளவும் பேசப்படுகிறார்கள். பெண்களும் அப்படித்தான் பெரும்பதவிகளும், செல்வங்களும் இருந்தாலும் பெண் என்னும் எண்ணம்தான் எப்போதும் இருக்கின்றது. பவுத்தர்களாக மாறியபிறகு தலித்துகளுக்கான சமதர்ம வாழ்வு சாத்தியப்படுகிறது, பிற மதங்கள் எல்லாம் இங்கு இந்து சாயலில்தான் இருக்கின்றன.

பெண் அடையாளத்தினை அறிவுத்தளத்திலும் சமூகத்தளத்திலும் நாம் மாற்ற வேண்டியுள்ளது. பாமா,சிவகாமி போன்ற தலைமுறையினர் தலித் இலக்கியத்தின் இயங்குதளத்தினை வெகு ஆழமாக்கி வைத்திருக்கின்றனர். சுகிர்தராணி போன்றோர்கள் பெண்மொழிக்கவிதைகளை அதன் வீரியத்தோடு ஆக்கி இருக்கின்றனர். பெண்ணெழுத்தை அடுத்த நிலைக்கு கொண்டு செல்ல இந்துத்துவத்திற்கு எதிராக ஆக்கங்களை உருவாக்கும் ஆளுமைகளாக இவர்கள் மாறவேண்டும். பௌத்தம் பேசும் ஆக்கங்களை இவர்கள் தர வேண்டும். பௌத்தமீட்சி ஒன்றுதான் தலித்துகளையும் பெண்களையும் விடுவிக்கும். அதற்கான ஏற்பாடுகளோடு பெண்ணிலக்கியம் பயணப்படவேண்டும். அது இந்தத் தலைமுறை ஆக்கவாளிகளில் கு.உமாதேவியின் கவிதைகளில் வந்துகொண்டிருக்கின்றது என்று நான் அவதானிக்கிறேன்.
Posted by பறை at 6:31 PM 1 comments Links to this post
Friday, February 19, 2010
தருணம்
தருணத்தின் அமைவு கிட்டாத எதுவும்
இன்மையோடு தொடர்கிறது
வந்ததிலிருந்தே வருகை குறித்த பெருமிதம்
மிகைந்து அழிகிறது துளித்துளியாய்
போகையில் அழிந்த எந்த துவாரமும்
காற்றையோ
நீரையோ
கொண்டு செல்வதில்லை
வருகையில் மிஞ்சும் போவதைக்
குறித்த எந்த பிரக்ஞையுமின்றி
இருக்கின்றோ மெல்லாம் நாம்
Posted by பறை at 9:17 AM 1 comments Links to this post
Thursday, February 4, 2010
ஏதோ

தீர்க்கமானக் கோடுகளால் வரையக்கூடியன
அல்ல அவை
பகடிகளற்ற சொற்கள் உலவும் வனம்
பிசிறுகள் சற்றேனும் இல்லா மேகம்
ஊறிய தேனில் மிதக்கும் மதுரம்
யாருமற்ற வெளியொன்றின் மௌனம்
எல்லாவற்றிலும்
இருக்கும் உன் எஞ்சிய அழகிடை
என்ன இருக்கின்றடு இன்னும்
இலக்கியப் பிரதிகளை உருவாக்குபவர்கள் கடவுள்கள் அல்ல தவறுகளைச் செய்வதற்கும் அவற்றுக்கான காரணங்களை அடுக்குவதற்கும். தமிழிலக்கியப் பிரதிகளை கவனத்தில் கொள்வோமெனில் இன்னும் மானுடம் மனம் திறந்து பேசக்கூடிய எத்தனையோ செய்திகள அப்படியே இருக்கின்றன.

தலித் பிரச்சினைகளை பிரதிகளாக்கிய காலங்களிலும் அது தீவிர உச்சகட்டத்தை அடைந்த நேரத்திலும் தற்போது அது தேவையற்றதென கருதப் படும் காலத்திலும் இன்னும் காத்திரமாக பேசப்பட வேண்டியவை அப்படியேதான் இருக்கின்றன. கதைகளாக்கப் பட வேண்டிய தலித் வாழ்வுகளும் அதன் எதிர்பாராத தீவிரமும் இன்னும் அப்படியேதான் இருக்கின்றன. அதைவிட இன்னும் முக்கியமானது என்னவென்றால் தலித் எழுத்தாளர்களே அதன் தீவிரம் தற்போது தேவையற்றது என்று கூறும் சூழல்தான்.

இதே அளவுகோலை வைத்துக்கொண்டுதான் பெண் ஆக்கவாளிகளையும் நோக்க வேண்டியுள்ளது. புதிராக இருக்கின்றாள் பெண் என்னும் அங்கலாயிப்பில் புரியவில்லை பெண் என்று சொல்லி அவர்களைப் பூடகமாக வைத்திருந்த சமூக கோட்பாட்டு அரண்களை யெல்லாம் உடைத்து தன்னை பிரகடனப்படுத்தியது பெண்மொழி எழுத்து.

அது அப்படி தன்னை உடைத்துக் கொண்டு வெளிவந்தபோது எல்லாமே தகர்ந்துபோயின. எந்தெந்த உறுப்புகளை மையமாக வைத்து ஆண் ஆக்கங்கள் பெண்ணைப் பார்த்தனவோ அவை திறக்கப்பட்ட பாசறையிலிருந்து எடுக்கப்பட்ட ஆயுதங்களாக மாறின. அவை காற்றின் எல்லா திசைகளிலும் கல்ந்து பெரும் வீச்சுடன் நெருங்கின. அதிர்ந்த ஆண் ஆக்கங்கள் அவற்றை எதிர்த்தன. கூக்குரல்கள் எழுப்பின. ஆனால் அவற்றையெல்லாம் மீறி பெண்மொழி காலமாக மாறிவிட்டது. அதனை காலத்திலிருந்து யாரும் பிரிக்கமுடியாது.

ஆனால் லீனா மணிமேகலை என்னும் கவிஞரின் கவிதைகள் ஆபாசமாக இருக்கின்றன என்று இந்துத்துவ இயக்கங்கள் காவல் துறையிடம் புகார் கொடுத்திருக்கின்றது என்று ஒரு செய்தி அடிபடுகிறது. அது உண்மையாக இருக்கும் என்றும் சொல்லப்படுகிறது. அப்படி உண்மையாக இருக்கும் பாட்சத்தில் அதில் என்னவிதமான நியாயம் இருக்கின்றது என்று தெரியவில்லை. அதுவும் அது குறித்து கேள்விகள் கேட்கும் தாத்பரியங்கள் எதுவும் இந்துத்துவ அமைப்புகளுக்கு இல்லை.

இந்துக் கோவில்களில் உள்ள ஆபாசமான சிலைகள். இந்துக்கடவுளர்களின் ஆபாச புராணங்கள் இதெல்லாம் எப்படி நியாயப்படுத்தப்படுபவனாக இருக்கக் கூடும்.
எழுத்து என்பது அவருடைய உரிமை. அவரின் துன்பங்களை அவஸ்தைகளை எழுச்சியை எழுதுவதற்கு அவருக்கு உரிமை உண்டு. அப்படி இருக்கும்போது அது ஆபாசம் ஆபாசமில்லை நியாயத்தீர்ப்பு வழங்க யாருக்கும் உரிமை இல்லை.
எழுத்துதான் சமூகத்தை மாற்றி இருக்கின்றது. அதனால்தான் இந்துத்துவ இயக்கங்கள் இதை தூக்கிப் பிடிக்கின்றன. தீட்டு என ஒதுக்கி வைத்தவைகள் எல்லாம் பாடுபொருளாக மாறிவிட்டன. தடைகளைத் தகர்க்கின்றன. சமூகத்தினை கட்டுடைக்கின்றன. அதனால் தாங்கல் அமைத்துவைத்துள்ள சாதிய அடுக்குகள் சரிந்துவிடுகின்றன அதனால் தங்களின் வியாபாரம் நடக்கவில்லை என்பதுதான் அவர்களைன் இந்த எரிச்சலுக்குக் காரணம். கவலைப் படாதீர்கள் மதவாதிகளே நீங்கள் நினைக்கின்ற எதுவும் இங்கு நடக்காது. தீட்டு என்று நீங்கள் ஒதுக்கிவைத்தவர்கள் எல்லாம் எழுத்தை ஆயுதமாகத் தூக்கிவருகிறார்கள். உருட்டப்பட்ட உத்ராட்சைகளில் உலகை ஆளாலாம் என்ற கனவினை விட்டுவிடுங்கள் தீட்டுத்துணியென நீங்கள் சொன்ன அதுதான் புத்தகங்களாகவும் விடுதலைக்கான கருவியாகவும் பயன்பட வருகின்றன. ஒட்டுமொத்த விடுதலைக்காக பீ வாரிய கரண்டியும் கூடையும் செருப்புத்தைத்த ஊசிகளும் பேனாக்களாகிப் பேசுகின்றன. சேரிகள் பாசறைகளாகின்றன. பாடங்கள் ஊட்டப்படும்
Posted by பறை at 5:37 AM 3 comments Links to this post
Wednesday, March 10, 2010

அப்படி இன்னும் தெரியவில்லை யாருக்கும்
கடந்தவைகளின்மீதும்
நிகழ்பவைகளின்மீதும்
வினையாற்றும் விவரம்
கருமையின் இருப்பாயிருக்கும்
காலமேகம் பொழியும் மழையின் துயரம்
வேர்களை வேட்டையாடும் பொழுது எதுவாயினும்
அதில் நிகழும் மாற்றத்தின் குடியமர்ந்து
வாழும் குயிலின் பாடலைப் போல
அமைந்திருக்கும் வாழ்வு
Posted by பறை at 5:59 PM 0 comments Links to this post
Tuesday, March 2, 2010
தலித் பெண்ணெழுத்து: அடைய வேண்டிய பொன் இடம்


(விளாத்திகுளத்திலிருந்து வெளிவரும் கரிசல்கதிர் என்னும் இதழில் வெளியானது)

தமிழ் இலக்கிய வரைவினில் இன்றைக்கு பெண் எழுத்து முக்கியமான இடத்தை அடைந்திருக்கின்றது.சங்க இலக்கியத்திலேயே தமிழில் பெண் ஆக்கவாளிகள் மிகவும் சிறப்பாகவும் தங்களைன் எண்ணங்களை எந்தவிதமான தயக்கமுமின்றி கூறும் தன்மையுடன் இருந்திருக்கின்றனர். வெண்ணிக்குயத்தியார் என்னும் பெண்பால் புலவர் தன் காதலனைக்குறித்து பாடுவதும் அவனைத்தேடி செல்லுதலும் தமிழரின் வாழ்வுக்கு எடுத்துக்காட்டாய் அமைகின்றன. பௌத்த சமண சமயங்களின் பரவலால் வேறுபாடுகளற்றதாய் தமிழ்ச்சமூகம் இருந்தது. அதனால்தான் தற்கொல்லியை முற்கொன்ற குண்டலகேசி கதைகள் எழுதப்பட்டன.சமய இலக்கியக் காலங்களில் ஆண்டாளின் கவிதைகள் அவருடைய கடவுள்சார்ந்த கருத்துக்களை விட்டுவிட்டு பார்க்கின்றபோது அற்புதமான கவிதைகள். கவிதைக்கான தொழில்நுட்பத்துடன் இயங்கக் கூடியன அவை.

அதற்குப்பிறகு தமிழிலக்கிய வெளியில் பெண் எழுத்துக்கான தேக்கம் மிக நீண்டகாலமாகவே இருந்தது என்பது மறுக்கவொண்ணாதது.எங்காவது ஒருவர் எப்போதாவது ஒருவர் எழுதியிருப்பார். ஆனால் அவருடைய ஆக்கங்கள் அத்தனையளவு பேசப்பட்டிருக்குமா என்றால் இல்லை. காதலா கடமையா என்னும் நாவலை எழுதிய சித்தி ஜுனைதா பேகம் இபோதுதான் வெளியே தெரிய ஆரம்பித்திருக்கின்றார். இந்தக் காலக்கட்டத்தில் கவிதையில் பெண் நிலை என்பது மிகவும் மோசமாகவே இருந்தது. பத்தொன்பதாம் நூற்றாண்டில் தமிழ்க்கவிதை இரு நதிகளாய் கிளைவிட்டு நகர்ந்தபோதும் எந்த நதியிலும் பெண்ணெழுத்துக்கான தடம் பதியப்படவில்லை. வானம்பாடிகளானாலும் நவீன கவிதைகளை உருவாக்கியவர்களானாலும் பெண்களை முன்னிலைப்படுத்தவில்லை. அவரவர் ஆக்கங்களில் வேண்டுமானாலும் பெண்கள் குறித்த சித்திரங்களை எழுதினார்களே ஒழிய பெண் எழுதும் தளம் என்பது உருவாகவில்லை.

அதற்குப் பல காரணங்களை நம்மால் பட்டியல் போடமுடியும்.பெண்கல்வி என்பது மிகவும்குறைவாக இருந்தது. விடுதலை அடைந்த ஆண்டில் ஆயிரம் பெண்களில் ஆறு பெண்கள்தான் படித்திருந்தார்கள் என்றெல்லாம் புறக்காரணிகளை அடுக்கலாம். ஆனால் அவற்றையெல்லாம்விட மிக முக்கியமானது எழுத்து ஆதிக்கக் காரர்களிடமிருந்தது. அது அவர்கள் வீட்டுப்பரணில் பதுங்கியிருக்கும் பூனையைப்போலத் தான் பதுங்கியிருந்தது. இந்திய ஆதிக்கம் என்பது இந்து ஆதிக்கம் தானே. தமிழர்களும் இடைக்காலத்தில் பௌத்த வீழ்ச்சிக்குப் பிறகு காவிமயமாதல் நிகழ்ந்து தமிழகமும் தன்னிலை மறந்த சுடுகாடாக இந்துத்துவ சிந்தனை வெளியில் இருந்தது

அந்தக்காலக்கட்டங்களி தோன்றிய எழுத்து வகைகள் ஆதிக்கவெறி பிடித்தவர்களின் வாழ்வையும் அவர்களின் மொழியும்தான் பதிவாகின.இந்த நிலையில் பொதுவரங்கில் எழுதவந்த பெண்கள் தமிழ்ச்சூழலில் கதைகள் எழுதினார்கள். அதில் அவர்கள் பெண்களை விடுதலைக்கானவர்களாகக் கருதாமல் அவர்களை மற்ற ஆண் எழுத்தாளர்கள் எழுதுவதைபோலவே எழுதினார்கள் என்பதும் கண்கூடு.


தொன்னூறுகளில் தலித் எழுத்து தமிழில் தீவிரமடைகிறபோதுதான் பெண்ணெழுத்தும் தீவிரமடைகின்றது. எப்படி அரசியல்தளத்திலு சமூகத்தளத்திலும் தலித் விடுதலையும் பெண்விடுதலையும் ஒருசேரப் பார்க்கப்படுகின்றதோ அதைப் போலத்தான் இலக்கியத்திலும் பார்க்கப்பட வேண்டும். ஆதிக்கப் புலத்திருந்து கல்வியும் வாசிப்பும் பெண்களுக்கும் தலித்துகளுக்கும் கிடைத்தபோதுதான் அவர்கள் அவர்களுக்கான எழுத்தினை உருவாக்கினார்கள். அந்த எழுத்தின் காத்திரமும் அதன் தேவையும் இன்று சமூகத்தளத்தின் போதாமைகளை எடுத்துப் பேசுகின்றன. தலித் எழுத்தாளர்கள் தொட்ட பிரச்சினைகள் வாழ்வியல் விழுமியங்களாக இருந்து பின்னால் அவை அரசியல் முழக்கங்களாக மாறி அரசின் திட்டங்களாக அவை உருவாகின்றன. இத்தகைய குறைந்தபட்ச சமூக மாற்றத்தையாவது இவ்வகையான எழுத்துக்கள் கொணர்ந்திருக்கின்றன.

இச்சூழலில் பெண்ணெழுத்தின் இன்றைய நிலை யாது என்னும் கேள்வி எழுகிறது. மனுவின் கூற்றுப்படி பெண் பார்ப்பனக் குலத்தில் பிறந்திருந்தாலும் சூத்திரருக்குரிய ஒடுக்குதலுக்கு உள்ளாகிறவளாக இருக்கிறாள். அதனால் பொதுப் பெண்ணியம் எனபதும் அதைச் சார்ந்து இயங்கக் கூடிய இலக்கியத்தளம் மட்டுமே போதும் என்பதையும் தாண்டி தலித் பெண்ணியம் பேசப்படுகிறது. பொதுவான பெண்ணிலக்கியம் தலித் பெண்ணின் விடுதலையைச் சாத்தியப்படுத்துகிறதா? பல பொதுப் பெண்ணிய எழுத்தாளர்கள் மேல்தட்டு மனோபாவதோடு மட்டுமே இயங்குகிறார்கள் என்பதும் கண்கூடு.

தலித் பெண்ணெழுத்து என்பது பொதுப்பெண்ணியத்திலிருந்து எந்தப் புள்ளியில் வேறுபடுகிறது எப்படி அதன் இயக்கம் இருக்கும் என்பது குறித்த பிரக்ஞை ஏதுமற்று சாதி ஒடுக்குமுறைகளையும் அதனால் ஏற்பட்டு துயரவெளிகளையும் ஆக்கங்களாக மாற்றிவிடுவது மட்டுமே ஆகாது. மாறாக பெண் அடக்குமுறைக்கு உள்ளான காலத்தின் சூழ்ச்சிக்குறித்தும் அதன் கூரிய அம்பாகவும் ஆயுதமாகவும் இருக்கின்ற மதம் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தாமல் தலித் பெண்ணெழுத்தும் சாத்தியமற்றுதான் போய்விடும்.

தலித் எழுத்துக்கான தேவை நிறைவடைந்துவிட்டதாகவும் அது தேங்கிவிட்டதாகவும் கூறுபவர்கள் தலித்திய சிந்தனையின் ஆழத்திலிருந்து புறப்படாதவர்கள். அதேபோல்தான் தலித் பெண்ணெழுத்தும். பெண்ணிய எல்லாவாத அடிமைத்தனத்திற்கும் காரணமாய் இருப்பது ஒன்றுதான் அதுதான் இந்து மதம். தீட்டு என்னும் சொல்லைப் பயன்படுத்தி தன் குடும்பத்தில் உள்ள பெண்களையே வீட்டிற்கு வெளியே வைத்ததுதான் இந்து ஆதிக்க மரபு.இதையே சமூகத்திற்குப் பொருத்தினால் சேரி. உழைக்கின்ற பெண்களை அவர்களின் உழைப்பைச் சுரண்டி அவர்களின் உடல் உபாதைகளைப் பற்றிய அக்கறை ஏதுமின்றி புறந்தள்ளிஅவர்களின் வாழ்வாதாரத்திற்குத் தேவையான எல்லாவற்றையும் மறுத்து ஆணை குடும்பத்தை சார்ந்து வாழ்வதுதான் அவர்களுக்கு விதிக்கப்பட்டது என்று சொல்லி பெண் என்னும் உயிரை ஒரு பொருளாகக் கூட மதிக்காததுதான் இந்துத்துவம்.

தலித்துகளும் பெண்களும் இந்துத்துவ ஆதிக்கத்தினால் சமூகத்தின் விளிம்பு நிலைக்குத் துரத்தப்பட்டவர்கள் என்றாகின்றனர். சமூகம் இந்த இந்துத்தத்துவத்தினால் ஜனநாயகமற்றதாய் மாறிவிட்டது. இதைக் கருத்துருவாகக்கொண்டு இந்துமத வெளியேற்றமே சமூக விடுதலை என்றாய்ந்து அதை நிலைநிறுத்த நாக்பூரில் அய்ந்து லட்சம் மக்களோடு புத்த மதத்திற்கு மாறினார் புரட்சியாளர் அம்பேத்கர். இந்துவாகப் பிறந்தேன் அது ஒரு விபத்து; ஆனால் கண்டிப்பாக இந்துவாகச் சாக மாட்டேன் என்று சொல்லி ஏறக்குறைய முப்பது ஆண்டுகால தீவிர தேடலுக்குப் பிறகு பவுத்தம்தான் மானுட விடுதலைக்கு சரியான வழி என்று பிரகடனம் செய்து அதை நிறைவேற்றினார் புரட்சியாளர்.

இந்தப் புள்ளியிலிருந்துதான் பெண்ணெழுத்தைப் பார்க்க வேண்டியுள்ளது. இந்துத்துவம்தான் பெண்ணை மனிதப் பிறப்பிலிருந்து கழித்து வைத்தது. பெண்களை இனப்பெருக்கம் செய்வதற்கும் வயல்வெளிகளில் மாடுகளைப் பயன்படுத்துவதைப்போல வீட்டில் வேலைகளை குறிப்பாக ஆணுக்கான வேலைகளைச் செய்வதற்கும் நிர்பந்தப்படுத்தியது. அவர்களின் உடலைவைத்தே அவர்களைப் புறந்தள்ளியோ அல்லது வன்புணர்வு செய்தோ அல்லது அதைக் கொண்டாடி தன்னின்பத்திற்குப் பயன்படுத்திக்கொண்டது. அந்த உடலைப் பயன்படுத்திதான் இன்றைய நவீன பெண்கவிஞர்கள் ஆண் சமூகத்திற்கு எதிராக எழுத ஆரம்பித்தார்கள்

மயிர்கள் சிரைக்கப்படாத என் நிர்வாணம்
அழிக்கப்படாத காடுகளைப்போல்
கம்பீரம் வீசுகிறது

என்று சுகிர்தராணியால் எழுதமுடிகிறது என்றால் அதை பாலியல் கவிதை என்று சொல்லிவிட முடியாது. மறுக்கப்பட்ட யோனிகளையும் முலைகளையும் பதாகைகளாக உயர்த்துவது என்னும் கருத்தியலின் மூலம் அது. ஆனால் இத்தகைய கவிதைகளை ஆண் அறிஞர்கள் பாலியல் கவிதைகள் என்று வகைமைப்படுத்துகிறார்கள். இத்தகைய கவிதைகள் பாலியல் கவிதைகள் அல்ல அவற்றை பெண்மொழிக் கவிதைகள் என்றும் கூட நாம் அழைக்கலாம். ஆணியத்திற்கு எதிராக இந்தக் கவிதைகள் மாறியிருக்கின்றன. அதுவும் நல்லதுதான். ஆனால் வெறுமனே ஆணியம் அல்லது லிங்கமைய வாதம் என்பது பொதுப் பெண்ணியம். அதில் தலித் பெண்ணியத்திற்கான நுண்ணரசியலைக் கட்டக்கூடிய இடம் இல்லாமலே இருக்கின்றது. சமூக அரசியலில் சமத்தன்மை வருவதற்குப் புரட்சியாளர் அம்பேதகர் சொன்ன இந்துக்களிடமிருந்து விடுதலை என்னும் தத்துவத்தைத்தான் நாம் இங்கே பொருத்த வேண்டும். ஆணியம் என்பது இந்துத்துவத்தின் ஓர் ஏற்பாடு.

ஆக, பெண்ணெழுத்து எதை மோதி உடைக்க வேண்டும் என்றால் இந்துத்துவத்தை. அதன் கூறாக இருக்கின்ற இந்துமதத்தை. அதன் முகமூடியாக இருக்கின்ற இந்துத்துவ பயங்கரவாத அரசியலை. அதன் இயங்குதளமாக இருக்கின்ற இந்துப் பண்பாட்டு முதல்வாதத்தை. என்ன நடக்கிறது உண்மையிலே என்று பார்த்தால் பொதுவான பெண் ஆக்கவாளிகள் யாரும் தங்களுடைய இந்து அடையாளத்தை துறந்தாரில்லை. அகில இந்திய அளவில் அரசியலில் இந்து அரசியலுக்கு எதிராகப் பார்க்கப்படுகின்ற பிருந்தா காரத் கூட இந்து அடையாளமாகிய பெரிய பொட்டோடுதான் காட்சி தருகிறார்கள். இந்துத்துவம் சொன்ன பெண் அடையாளங்கள் அனைத்தும் பெண் ஆக்கவாளிகளிடத்தில் இருக்கின்றன. புற அடையாளங்களான உடைகளில் மாற்றங்கள் இருக்கின்றன. இது இப்போது எந்தவிதமான சமூக அக்கறையுமின்றி குடும்ப அடிமைகளாக இருக்கின்ற பெண்கள்கூட அழகியலை முன்னிருத்தி இத்தகைய புற அடையாள மாற்றங்களோடுதான் இருக்கின்றார்கள்.

சமூக முன்னனியினராக இருக்கக்கூடிய பெண் ஆக்கவாளிகள் எந்நிலையிலிருந்து தங்கள் முன்னெடுப்பைத் தொடுப்பது என்பதுதான் நம் வினா. தலித் அரசியல் நிலையில்தான் அதனை முன்னெடுக்கவேண்டும். அரசியலில் எத்தனையோ உயர்பதவிகளில் தலித்துகள் இருக்கின்றார்கள். பெரும்பணக்காரர்களாகவும் இருக்கின்றனர் ஆனால் அவர்களின் மீதான சாதி இழிவு போய்விட்டதா என்றால் இல்லை எல்லாரும் ’அவங்கதான்’ என்றுதான் இன்றளவும் பேசப்படுகிறார்கள். பெண்களும் அப்படித்தான் பெரும்பதவிகளும், செல்வங்களும் இருந்தாலும் பெண் என்னும் எண்ணம்தான் எப்போதும் இருக்கின்றது. பவுத்தர்களாக மாறியபிறகு தலித்துகளுக்கான சமதர்ம வாழ்வு சாத்தியப்படுகிறது, பிற மதங்கள் எல்லாம் இங்கு இந்து சாயலில்தான் இருக்கின்றன.

பெண் அடையாளத்தினை அறிவுத்தளத்திலும் சமூகத்தளத்திலும் நாம் மாற்ற வேண்டியுள்ளது. பாமா,சிவகாமி போன்ற தலைமுறையினர் தலித் இலக்கியத்தின் இயங்குதளத்தினை வெகு ஆழமாக்கி வைத்திருக்கின்றனர். சுகிர்தராணி போன்றோர்கள் பெண்மொழிக்கவிதைகளை அதன் வீரியத்தோடு ஆக்கி இருக்கின்றனர். பெண்ணெழுத்தை அடுத்த நிலைக்கு கொண்டு செல்ல இந்துத்துவத்திற்கு எதிராக ஆக்கங்களை உருவாக்கும் ஆளுமைகளாக இவர்கள் மாறவேண்டும். பௌத்தம் பேசும் ஆக்கங்களை இவர்கள் தர வேண்டும். பௌத்தமீட்சி ஒன்றுதான் தலித்துகளையும் பெண்களையும் விடுவிக்கும். அதற்கான ஏற்பாடுகளோடு பெண்ணிலக்கியம் பயணப்படவேண்டும். அது இந்தத் தலைமுறை ஆக்கவாளிகளில் கு.உமாதேவியின் கவிதைகளில் வந்துகொண்டிருக்கின்றது என்று நான் அவதானிக்கிறேன்.
Posted by பறை at 6:31 PM 1 comments Links to this post
Friday, February 19, 2010
தருணம்
தருணத்தின் அமைவு கிட்டாத எதுவும்
இன்மையோடு தொடர்கிறது
வந்ததிலிருந்தே வருகை குறித்த பெருமிதம்
மிகைந்து அழிகிறது துளித்துளியாய்
போகையில் அழிந்த எந்த துவாரமும்
காற்றையோ
நீரையோ
கொண்டு செல்வதில்லை
வருகையில் மிஞ்சும் போவதைக்
குறித்த எந்த பிரக்ஞையுமின்றி
இருக்கின்றோ மெல்லாம் நாம்
Posted by பறை at 9:17 AM 1 comments Links to this post
Thursday, February 4, 2010
ஏதோ

தீர்க்கமானக் கோடுகளால் வரையக்கூடியன
அல்ல அவை
பகடிகளற்ற சொற்கள் உலவும் வனம்
பிசிறுகள் சற்றேனும் இல்லா மேகம்
ஊறிய தேனில் மிதக்கும் மதுரம்
யாருமற்ற வெளியொன்றின் மௌனம்
எல்லாவற்றிலும்
இருக்கும் உன் எஞ்சிய அழகிடை
என்ன இருக்கின்றடு இன்னும்

Thursday, May 6, 2010

அப்படி இன்னும் தெரியவில்லை யாருக்கும்
கடந்தவைகளின்மீதும்
நிகழ்பவைகளின்மீதும்
வினையாற்றும் விவரம்
கருமையின் இருப்பாயிருக்கும்
காலமேகம் பொழியும் மழையின் துயரம்
வேர்களை வேட்டையாடும் பொழுது எதுவாயினும்
அதில் நிகழும் மாற்றத்தின் குடியமர்ந்து
வாழும் குயிலின் பாடலைப் போல
அமைந்திருக்கும் வாழ்வு