Thursday, July 22, 2010

நீர் உரிமை

சந்திரபாபு நாயுடுவின் போராட்டம் ஒரு சிறந்த எடுத்துக்காட்டாக இருந்தும் தமிழர்கள் வெறுமனே வாளாதிருக்கின்றார்கள். சந்திரபாபு நாயுடு சமீபத்தில் மகாராட்டிர போலீசால் குண்டுகட்டாகத் தூக்கி வரப்பட்டு தனிவிமானத்தில் ஐதராபாத் விமானநிலையத்தில் தன் சகாக்களோடு வந்து கொட்டப்பட்டார். அவர் என்ன இந்தியாவை விட்டு வெளிநாட்டுக்கா சென்றார். அவருடைய அண்டை மாநிலமான மகாராட்டிராவுக்குத்தான் சென்றார். ஒரு சுற்றுலாப் பயணியாக ஜாலியாக ஒரு டூர் அடித்தால் பரவாயில்லை. ஆனால் மகாராட்டிர மாநிலத்தில் நாண்டெட் மாவட்டத்தில் பாப்லி என்னும் இடத்தில் கோதாவரி ஆற்றின் குறுக்கே கட்டப்படும் அணைக்கட்டை தடுக்க வேண்டி அதைப் பார்க்க போயிருக்கின்றார். மகாராட்டிர அரசு இதற்கு தடை விதித்திருக்கின்றது. அதை மீறிதான் அந்தப்போராட்டத்தை மாவீரர் சந்திரபாபு நடத்தியிருக்கின்றார். ஒரே ஒரு காரணம் தான் ஆந்திராவுக்கு வரும் தண்ணீரை அந்த அணை தடுக்கின்றது என்பதுதான் அது. நியாயம் தானே இந்தப் போராட்டம். ஆந்திராவின் முன்னாள் முதல்வர் பிற மாநிலத்தில் அத்துமீறி நுழையலாமா?

ஆற்றங்கரையில் வாழக்கூடியவர்களின் உரிமை அது. அவர்களுக்கான நீர் உரிமை. அதை அப்படியே தமிழ்நாட்டுக்குப் பொருத்துங்கள் பார்க்கலாம். கர்நாடகாவிலிருந்து வரும் காவிரி தமிழர்களுக்கு வாய்க்காமலே போய்விட்டது. மிகை நீராக வரும் ஒகேனக்கல் நீரை தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்ட மக்களுக்குத்தரலாம் என்றால் கர்நாடகக் காரர்கள் தமிழ்நாட்டில் நுழைக்கின்றார்கள். பாலாறும் அங்கிருந்துதான் தொடங்குகின்றது. தமிழ்நாட்டிற்குள் வருவதற்கு முன்பு ஆந்திராவின் வழியாகத்தான் வருகின்றது. ஆந்திராவில் அது 30 கிமீ தூரத்திற்குத்தான் பாய்கின்றது.

ஆனால் இந்தக் கூத்தை பாருங்கள். 30கிமீ நீளத்திற்கு 32 தடுப்பணைகள் கட்டப்பட்டு ஒரு சொட்டு தண்ணீர்கூட தமிழகத்திற்கு வருவதில்லை. இப்போது கணேஷ்புரம் என்னும் இடத்தில் ஒரு அணை கட்டப்பட்டு வருகின்றது. இதெல்லாம் யாரால் தெரியுமா? மாவீரர் சந்திரபாபு ஆட்சியால்தான். அதுவும் அவரின் சொந்த தொகுதியான குப்பம் தொகுதியில்தான். சரியா என்று கேட்டால் ‘என் தொகுதி மக்கள் நலந்தான் எனக்கு முக்கியம்’ என்று கூறினார் சந்திரபாபு. ஆனால் இப்போது அவர் போராடுகின்ற அணை மகாராட்டிர மாநில முதல் அமைச்சரின் தொகுதியில்தான் இடம்பெற்றிருக்கின்றது.

கீழ்ப்பாலாறு பகுதியில் இருக்கும் வேலூர் மாவட்டம், காஞ்சிபுரம் மாவட்டம் ஆகிய மாவட்டங்கள் வறண்டுகொண்டிருக்கின்றன. அதற்குக் காரணம் சந்திரபாபு கட்டிய தடுப்பணைகள்.

இதயெல்லாம் கேட்க தமிழகத்தலைவர்கள் போவார்களா? தமிழீழப் பிரச்சினையே இவர்களிடம் படாதபாடு பட்டது. தம்ழிநாட்டு ஓட்டாளிகளின் பிரச்சினையிக் கூட அவர்களால் தங்கள் சுயநலத்திற்காகத்தான் பார்ப்பார்கள்.
தமிழன் என்றால் என்ன அடிமை என்றுதானே அர்த்தம்.

No comments: