Tuesday, June 22, 2010

நெட்டைப் புல்லென காலை
பசுமையாய் மலர்ந்திருக்கிறதுகுருவிகள்
இன்னும் கூடுகளிலிருந்து வரவில்லை
சொற்கள் காலை பூமியின் மிருதுத்தன்மையை
அடைந்திருந்தன
செந்நாவுகளில் குறைந்தது ஒரு வட்டம்
இனிப்பாவது இருந்திருக்கின்றது
பகல் வரும் நேரம்
தயாராகின்றன தாவரங்கள்
அவ்வப்போது அவசரப்பட்டு அழுகின்றது
குழந்தை

No comments: