Saturday, June 5, 2010

சொல்ல முடியாதது

துயிலும் ஓர் இரவின் கூட்டில் என்னைப் பொருத்த
அதன் அடுக்குகளில் பயணமானேன்
தெளிவின் ஒளியின்மை என்னை நடத்துகின்றது
மரங்களின் பறவைகள் காய்களாகி இருந்தன
காற்றும் வீசுதலின்றி உறக்கம் பூசுகின்றது
பூக்கள் பற்றி எதையும் அறிய வாய்ப்பில்லை
பாதைகள் இரவு விளக்கினைத் தொலைத்த நேரமது
கற்கள் கண்விழித்துக் கொண்டிருந்தன
எதையும் நோக்கும் நேரமின்மையின் அவசத்தில்
நிலா நில்லாமல் இருந்தது
பகலுறங்கும் புதருக்கடியில் பாம்புகள் உறவாடின
நடத்தல் சாத்தியம்ற்றுப் பின் கனவின் பயணம்
சொல்லவியலாத வார்த்தைகளாலானது அது.

No comments: