Monday, November 24, 2008

ஆயிரம் ஆண்டுகள் அன்புடன் வாழ்க


திருமணவிழாவில் யாழன் ஆதி





அன்பிற்கினிய நண்பர் கவிஞர் யுகபாரதியின் திருமணம் 23 நவம்பர் 2008 அன்று தஞ்சையில் நடைபெற்றது. மனசுக்கு மிக அண்மையில் வெகு எளிதாக குடியேறும் யுகபாரதிக்கு ஏராளமான நண்பர்கள். என்னுடைய இரண்டாம் தொகுப்பான ‘செவிப்பறை’ நூல் வெளியீட்டு விழாவிற்கு அவரை அழைத்தேன். ஏற்கெனவே என் கவிதைகள தலித் முரசிலும் பிற இதழ்களிலும் படித்திருந்த யுகபாரதி அன்புடன் அதற்கு ஒப்புக்கொண்டு வந்திருந்தார். தொடர் வண்டியில் இடம் கிடைக்காமல் பொருட்களை வைக்கும் இடத்தில் ஏறி உட்கார்ந்துக் கொண்டு வந்திருந்தார். எந்த சூழ்நிலையிலும் தன்னையும் தன் புன்னகையையும் இழக்காதவர் யுகபாரதி. திருமணத்திலும் அப்படியே இருந்தார். தமிழகத்தின் முக்கியமான தலைவர் அய்யா நல்லக்கண்ணு மற்றும் அவருடைய துணைவியார் ரஞ்சிதம்மாள் தலைமையில் திருமணம் நடைபெற்றது. தமிழ் இலக்கிய மற்றும் திரைப்பட முன்னணியினர் வந்திருந்து மணமக்களை வாழ்த்தினர்.இயக்குனர்கள் லிங்குசாமி, சுப்ரமணியம் சிவா, பாலாஜி சக்திவேல், கரு.பழனியப்பன், சேரன் ஆகியோர் வந்திருந்தனர். பாடலாசிரியர்கள் வைரமுத்து, நா. முத்துக்குமார் போன்றவர்களும் கவிஞர்கள் ஈரோடு தமிழன்பன், தமிழச்சி. லீனா மணிமேகலை, இசையமைப்பாளர் வித்யாசாகர், எழுத்தாளர் நாகூர் ரூமி, திரு.வீரபாண்டியன் ஆகியோரும் வந்திருந்தனர். தமிழகம் முழுக்க ஏராளமான நண்பர்கள் வாசகர்கள் படைப்பாளிகள் கலந்துக்கொண்டு யுகபாரதியையும் மணமகள் அன்புச்செல்வியையும் வாழ்த்தினர்.
தன்னுடைய சொந்த மண்ணிலே மணவிழாவை நடத்தினார் யுகபாரதி. அவர்களுடைய உற்றார் உறவினரின் மண்வாசம் அந்த மணவிழா முழுவதும் இருந்தது. அவர் தன் தாய்மேல் வைத்திருந்த அபரிதமான அன்பும் நம்பிக்கையுமே அவரை இவ்வளவு உயரத்தில் கொண்டுவந்து நிறுத்தியிருக்கிறது என்று பேசியவர்கள் அனைவரும் கூறியது உண்மையாகத்தான் இருந்தது. அந்தத் தாய் தன் மகனை சான்றோன் எனக் கேட்டவர். ஆயிரம் ஆண்டுகள் யுகபாரதி ‘அன்புடன்’ வாழவேண்டும்.
தமிழ் கவிஞர்களின் வேடந்தாங்கல் அண்ணன் அறிவுமதி மணவிழாவில் அனைவரையும் வரவேற்றுப் பேசினார். அய்ந்து ஆண்டுகளுக்குப் பிறகு அண்ணன் அறிவுமதியை யுகபாரதி திருமணத்தில் சந்தித்தேன். அதே தாயுள்ளத்தோடு என்னை எல்லாரிட்த்திலும் ‘ஏந்தம்பி’ என்று அறிமுகப்படுத்தி வைத்தார்.
எல்லாருக்கும் மனநிறைவான மணவிழா யுகபாரதியினுடையது.
அன்பிற்கினிய நண்பர் கவிஞர் யுகபாரதியின் திருமணம் 23 நவம்பர் 2008 அன்று தஞ்சையில் நடைபெற்றது. மனசுக்கு மிக அண்மையில் வெகு எளிதாக குடியேறும் யுகபாரதிக்கு ஏராளமான நண்பர்கள். என்னுடைய இரண்டாம் தொகுப்பான ‘செவிப்பறை’ நூல் வெளியீட்டு விழாவிற்கு அவரை அழைத்தேன். ஏற்கெனவே என் கவிதைகள தலித் முரசிலும் பிற இதழ்களிலும் படித்திருந்த யுகபாரதி அன்புடன் அதற்கு ஒப்புக்கொண்டு வந்திருந்தார். தொடர் வண்டியில் இடம் கிடைக்காமல் பொருட்களை வைக்கும் இடத்தில் ஏறி உட்கார்ந்துக் கொண்டு வந்திருந்தார். எந்த சூழ்நிலையிலும் தன்னையும் தன் புன்னகையையும் இழக்காதவர் யுகபாரதி. திருமணத்திலும் அப்படியே இருந்தார். தமிழகத்தின் முக்கியமான தலைவர் அய்யா நல்லக்கண்ணு மற்றும் அவருடைய துணைவியார் ரஞ்சிதம்மாள் தலைமையில் திருமணம் நடைபெற்றது. தமிழ் இலக்கிய மற்றும் திரைப்பட முன்னணியினர் வந்திருந்து மணமக்களை வாழ்த்தினர்.இயக்குனர்கள் லிங்குசாமி, சுப்ரமணியம் சிவா, பாலாஜி சக்திவேல், கரு.பழனியப்பன், சேரன் ஆகியோர் வந்திருந்தனர். பாடலாசிரியர்கள் வைரமுத்து, நா. முத்துக்குமார் போன்றவர்களும் கவிஞர்கள் ஈரோடு தமிழன்பன், தமிழச்சி. லீனா மணிமேகலை, இசையமைப்பாளர் வித்யாசாகர், எழுத்தாளர் நாகூர் ரூமி, திரு.வீரபாண்டியன் ஆகியோரும் வந்திருந்தனர். தமிழகம் முழுக்க ஏராளமான நண்பர்கள் வாசகர்கள் படைப்பாளிகள் கலந்துக்கொண்டு யுகபாரதியையும் மணமகள் அன்புச்செல்வியையும் வாழ்த்தினர்.
தன்னுடைய சொந்த மண்ணிலே மணவிழாவை நடத்தினார் யுகபாரதி. அவர்களுடைய உற்றார் உறவினரின் மண்வாசம் அந்த மணவிழா முழுவதும் இருந்தது. அவர் தன் தாய்மேல் வைத்திருந்த அபரிதமான அன்பும் நம்பிக்கையுமே அவரை இவ்வளவு உயரத்தில் கொண்டுவந்து நிறுத்தியிருக்கிறது என்று பேசியவர்கள் அனைவரும் கூறியது உண்மையாகத்தான் இருந்தது. அந்தத் தாய் தன் மகனை சான்றோன் எனக் கேட்டவர். ஆயிரம் ஆண்டுகள் யுகபாரதி ‘அன்புடன்’ வாழவேண்டும்.
தமிழ் கவிஞர்களின் வேடந்தாங்கல் அண்ணன் அறிவுமதி மணவிழாவில் அனைவரையும் வரவேற்றுப் பேசினார். அய்ந்து ஆண்டுகளுக்குப் பிறகு அண்ணன் அறிவுமதியை யுகபாரதி திருமணத்தில் சந்தித்தேன். அதே தாயுள்ளத்தோடு என்னை எல்லாரிட்த்திலும் ‘ஏந்தம்பி’ என்று அறிமுகப்படுத்தி வைத்தார்.
எல்லாருக்கும் மனநிறைவான மணவிழா யுகபாரதியினுடையது.

No comments: