Friday, May 13, 2011

அப்படியே ஆகக்கடவது

அடைவதின் காயத்தை சுமந்து தவிக்கின்றது
தேவனால் கைவிடப்பட்ட
ஆடொன்று
முட்கள் நிறைந்தொரு பள்ளத்தாக்கில்
கம்மிய தன் தொண்டைய
செருமிசெருமி கத்தும் அதன் சன்னக் குரலில்
தாகம் இழையோடுகிறது
ஆட்டைத் தேடிவந்த தேவகுமாரனின்
கண்களில் விழுந்த தூசியை எடுக்க
கானாற்றில் கண்கழுவ போனவனை
கால்களை கடித்து உள்ளிழுத்துக்கொள்கிறது
நீண்ட வாயும் கூரிய பற்களையும் உடைய
முதலை
விழுங்கப்படும் தேவகுமாரனின் கடைசி வார்த்தை
என் கடவுளே என் கடவுளே ஏன் என்னை கைவிட்டீர்
என்பதாம். ஆமென்

No comments: