Thursday, June 30, 2011

திசையடங்கா காட்டின் மூலையொன்றில்
தளிர்த்த இளம்பச்சை நிற குருத்தோலையில்
பதிவாகும் சின்ன குயிலின் இசை நரம்புகள்
அடர்ந்து வனமாகும் வேலையில்
பாடலின் பெரும்பரப்பெங்கும்
குயில்தாயின் பால்சுவடுகள்
கொத்திக்கிளறாத பேரமைதியில் காடுறங்கும்
தத்தித் தாவிவரும் புதுப்பாட்டு
அப்போதும் பிரசவமாகும்.

No comments: